பல விருப்பு வெறுப்புக்கு இடையில், வெகு நாட்கள் கழித்து கோவிலுக்கு சென்றேன். அங்கு கண்ட காட்சியின் தொகுப்பே இந்த பதிவு. நான் இருந்த வரிசையின் எதிர் வரிசையில் பல பெண்கள் பாவாடை-தாவணி அணிந்து இருந்தார்கள், தமிழ்நாட்டில் அல்ல அமெரிக்காவில். அப்பொழுது யோசித்து பார்த்தேன், பல வருடங்கள் சென்னையில் இருந்தோம், ஒரு பெண் கூட பாவாடை-தாவணி அணிந்து பார்த்தது இல்லை. ஏன் என்று என்னுள் பல கேள்விகள், அவை என்னுள் பயனதித்து.

கேள்வியும் நானே!!! தாவணி அணிந்த பெண்கள் எங்கே?
அடிப்படையில் பண்டிகை மற்றும் வீட்டின் மங்களகரமான நிகழ்வின் போதும், பெண்டிர் தாவணி அணிவது வழக்கம்.இப்போதெல்லாம் பெண்கள் சேலை மற்றும் தாவணி அணிய விரும்பவும் இல்லை,அவர்களுக்கு போதிக்க பெற்றோருக்கும் நேரம் இல்லை. இன்னும் சொல்ல போனால் ஒரு சில பெண்கள் திருமணத்தின் அன்று தான் சேலை உடுத்த தெரிந்து கொள்கிறார்கள். எங்கே போகிறது நமது கலாச்சாரம். மற்றவர்களை பார்த்து ஒப்பிட்டு பார்க்க விருப்பம் இல்லை என்றாலும், அவரவர் நாட்டில் அவர்களுடைய கலாசாரத்துக்கு ஏற்றவாறு அணிகிறார்கள் அனால் இங்கோ மற்றவர்களை பார்த்து மாறுகிறார்கள். முன்பு கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் பாவாடை-தாவணி அணிந்து இருப்பார்கள்,நகரில் சுரிதார், மாநகரில் ????, இப்பொழுது தலைகீழ் ஆனது,கலாச்சாரம் மாற்றத்தால்,கிராமத்து பெண்கள் நகரத்தானர பார்த்தும், நகரம்-மாநகனர பார்த்தும்,மாநகர்-வட இந்தியானவ பார்த்தும், அவர்கள் மேல்நாட்டவனர பார்த்தும் மாறினார்கள். அடுத்த தலைமுறையில் பாவாடை-தாவணி கனவு ஆகிவிடும் போல.
தேர் திருவிழா!!!
எங்கள் ஊரில்ஆண்டுதோறும் இரண்டு முறை திருவிழா நடைபெறும். நடராஜர் சிவகாமியின் ஊர்வலத்தை பார்க்க பெரிய கூட்டம் இருந்தாலும், பாவாடை-தாவணி அணிந்து வரும் பெண்களை பார்க்க கணிசமான கூட்டம் இருக்கும். நாங்களோ காலையில் எழுந்து என்றைக்குமே இல்லாமல் அப்பாவிடம் சண்டைப்போட்டு அவரிடம் வேஷ்டி வாங்கி சுற்றிக்கொண்டு, இடுப்பில் இருந்து விலகிவிடுமோ என்ற பயம் இருந்தாலும், விறுகொண்டு எழும் காளை போல் தேர் வீதியில் வளம் வருவோம் அப்பெண்களை பார்க்க. அவர்கள் கண்ப்பறிக்க அழகு பாவாடை-தாவணி உடுத்தி பல ஆண்களின் மனங்களை கொள்ளை அடிப்பார்கள். அனால் இன்றோ பல காளைகள் வேஷ்டி அணித்து சென்றாலும் சல்வார் கமீஸ் அணித்து வரும் பெண்களே அதிகம்!
கார்த்திகை தீபமும் & பொங்கல் திருநாளும் !!!
கார்த்திகை தீபம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது சொக்கப்பானையும் , அகல் விளக்கும் தெருவில் சொக்கப்பானை கொளுத்தியூடன் நண்பர்கள் அனைவரும் வீதிஉலா போவோம். பெண்கள் பாவாடை தாவணி உடுத்தி தங்களையும் அலங்கரித்து கொண்டு, சுடர் விடும் தீபத்தை விட பிரகாசமாக வீதியில் அகல் ஏற்றுவார்கள். காற்றில் தீபம் அங்கும் இங்கும் அசைவதுபோல், எங்களுடைய மனமும் போகவும் முடியாமலும் நிற்கவும் முடியாமலும் திணறுவோம் , மெதுவாக அடுத்த வீதிக்கு செல்வோம்.

தமிழர்களின் திருநாளன பொங்கல் திருநாள் அன்று பல பெண்கள் பாவாடை தாவணி அணித்து, தங்கள் கலாச்சாரத்தை பறைசாற்றுவர்கள். அந்த நாட்கள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தமிழ் பண்பாட்டின் வழக்க படி உடை அணிவார்கள்.