Sunday, September 21, 2014

சற்று முன்!!!


முன்னுரை

                                  வெகுநாட்களாக ஒரு சிறுக்கதை எழுத வேண்டும் என்ற அசை மேலோங்கிருந்தது, எப்படிப்பட்ட கதையாக இருக்க வேண்டும் என்று யோசிப்பதில் நேரம் சென்றதேதவிர, செயல்வடிவம் கொடுக்கவில்லை, அன்று ஒரு நாள் சுஜாதாவின் ஒரு புத்தகம் படித்துக்கொண்டு இருந்த பொழுது ஒரு 5 நிமிடத்தில் இக்கதை கரு தோன்றியது என்றாலும்,அக்கதையினை  பயனபதிலும், எழுதுவதிலும், பிழை திருத்துவதற்கும் எடுத்துகொண்டது ஏறத்தாள 14 மணிநேரம். உங்களுடைய விமர்சனத்தை எதிர்பார்த்து, இக்கதையை உங்கள் பார்வைக்கு விடுகிறேன்.

இக்கதையில் வரும் சம்பவங்களும்,பெயர்களும், கதாபாத்திரங்களும் அனைத்தும் கற்பனையே, யார் மனதையும், புண்படுத்துவோ, குறிப்ததோ அல்ல, மீறியும் உங்கள் மனதில் சந்தேகம் எழுமானால் அதற்கு யாரும்பொருபல்ல.
                                                          தமிழ் வாழ்க!!!
நன்றி 
சிவா 

புகை, மது உடல்நலத்துக்கு கேடு. இக்கதையின் தேவை கருதி இடம்பெற்று இருக்கிறது.

சற்று முன்!!!


                                                   இன்று வரை நான் உங்களின் உதவியாளரை சேர்ந்து 10 வருடம் ஆகிறது. அதற்க்காக ஒரு சின்ன பரிசு கொடுக்கலாம்ன்னு, இந்தாங்க பாஸ் என்று ஒரு கவரை கொடுக்கிறான் மிதுன்.பாலா சந்தேக பார்வை பார்த்து விட்டு கவரை பிரிக்கிறான். பாஸ் இரண்டு நபர்கள் சுற்றுலா சென்றுவர ஒரு டிக்கெட்.பாலா சற்று கிண்டலாக எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கிற!. ரொம்ப கணக்கு பார்த்து செலவு பண்ணுவ, பரவாவில்லையே ரொம்ப முன்னேறிட்ட. ஹ்ம்ம் அப்பறம் நல்ல கதை யோசிச்சிருக்க போல, அப்படியே என்னை விட்டு விலகி தனியா கதை எழுதலாம்னு முடிவு பண்ணிட்டபோல! ஹ்ம்ம் வாழ்த்துக்கள் என்று கவரை பிரிக்கிறான். அது எல்லாம் ஒன்றும் இல்லை பாஸ், எனக்கும் எழுத்துக்கும் ரொம்ப தூரம். ஏதோ அவ சொன்னானு கதை, எழுத்தாளர்னு உங்க கூட சுத்திக்கிட்டு இருக்கேன். 10 வருஷம் ஓடிடுச்சி, உங்ககிட்ட கத்துகிட்டது நிறைய, ஆனா கதை எதுவும் கிடைக்கவில்லை. என்னதான் கதை கிடைத்தாலும் உங்கள விட்டு போகமாட்டேன், வேதாளம் விக்கிரமாத்தியன் போல்தான் என்று சிரித்து கொண்டே சொன்னான் மிதுன். சரி பாஸ் நான் விட்டுக்கு போய் ரெடி ஆகிட்டு வரேன். நீங்களும் ரெடியாகிடுங்க!. மாலை 6 மணிக்கு பஸ். ரெடியாகிடுங்க பாஸ். டேய் மிதுன் நில்லுடா , நான் வரவில்லை, நீயும் உன் மனைவியும் போய்ட்டுவாங்க. இல்ல பாஸ் அவ அவங்க அம்மா வீட்டுக்கு போறலாம், அதான் டிக்கெட் வீணாகக்கூடாதுன்னு உங்கள  அழைத்துப்போகலாம்னு. இப்ப புரியிது மிதுன் உங்களோட காம்ப்ளிமென்ட்!!!. அசடு வழிந்துகொண்டு இருந்த மிதுன், அது இல்ல பாஸ் புதுசா கதை எழுதணும் சொன்னீங்க, அதான் புது இடத்துல போய் எழுதுனா நல்ல இருக்கும்னு. சரி பாலா சிக்கிரம் ரெடியாகிடுங்க, நான் வருகிறேன் என்று பதிலுக்கு காத்திராமல் ஓடி பாலாவின்  கண்பார்வையில் இருந்து மறைந்தான் மிதுன்.

                                 சிரித்துகொண்டே உள்ளே சென்ற பாலா , தனது உடைகளையும், காகிதங்களும், தனது பழைய கதைத்தொகுப்புகளையும் எடுத்துகொண்டு வீட்டை பூட்டி சாவியை எப்போதும் போல் வாசற்கதவின் மேல் இருக்கும் மறைவிடத்தில் வெய்துவிட்டு பேருந்துநிலையம் நோக்கி செல்கிறான். பேருந்து நிலையத்தின் கெடிகாரம் 5:30 என்று காட்டியது, இன்னும் மிதுன் வந்தபாடில்லை. ஒரு சிகிரட்டை பற்றவெய்து சற்றும் முற்றும் மிதுனை தேடுகிறான். தூரத்தில் அவசர அவசரமாக மிதுன் தனது மனைவியுடன் வருவதை பார்க்கிறான். கோபத்துடன் மிதுனை நோக்கி டேய் என்ன இதுஎல்லாம், நான் தான் அப்பயே சொன்னேன்ல என்று முடிபதற்குள், பாஸ் நான் போய் இவளை பஸ் ஏற்றி விட்டு வருகிறேன் என்று தனது மணைவியிடம் போகலாமா என்று கேட்க, அதற்குள் மறுமுனையில் ஒரு குரல், அண்ணா கதை எழுதனும்னா இங்கையே எழுத வேண்டியதுதானே, எதுக்கு வெளியூர் போய் எழுதுறீங்க. திடிர்னு மதியம் வந்து நானும் பாலாவும் வெளியூர் போறோம் கதை எழுத, அதனால நீ உங்க அம்மா வீட்டுல ஒரு வாரம் இருந்துட்டு வா சொல்லி அழச்சிட்டு வந்துட்டாரு. நான் கெளம்புறேன் அண்ணா இவர பார்த்துகோங்க.. சிக்கிரம் வா பஸ் கிளம்பபோகிறது என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறான். நான் இல்லைனு குடிச்சிட்டு கலாட்டா பண்ண அவ்வளவு தான் என்று அவளின் குரல் சற்று மங்கிகொன்டே சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் மிதுனின் குரல், பாஸ் வாங்க நாம போகலாம் நம்ம பஸ்சும் புறப்பட இருக்கிறது. டேய் இது எல்லாம் ஒரு பொழப்ப!!. கல்யாணம் அகிருந்த தானே உங்களுக்கு அந்த கஷ்டம் எல்லாம் தெரியும் என்று முனுமுனுத்து கொண்டே பஸ்சில் ஏறி அமர்ந்தான்.பாலாவும் வெறுப்பாக பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்தான்.

                        பஸ் புறப்பட்டு சிறிதுத்தூரம் சென்றது, அவசரமாக தனது பையில் இருந்து ஒரு கோக்பாட்டில்லை எடுத்து மொடக் மொடக் என்று குடித்துவிட்டு, அப்பப்பா!!! ஒரு பிளான் போட்டு சரியாய் முடித்து வருவதற்குள் எவ்வளவு கஷ்டம். ஏன்டா இப்படி பண்ணிட்டு இருக்க, இதுல வேற அவர பார்த்துகோங்க வேற சொல்லிட்டு போயிருகாங்க உன் மனைவி, நீ இப்பவே அரமித்துவிட்டாய். அதைவிடுங்க பாலா புதுசா கதை எழுதுவதற்கு எதாவது யோசிச்சிங்களா. இல்ல மிதுன். சரி யோசிங்க நான் தூங்குறேன்னு சொல்லிவிட்டு மிச்சம் இருந்த கோக்பாட்டில்லை முடித்துவிட்டு உறங்கிவிட்டான். கண்விழித்து பார்த்த நேரம் அவர்கள் வந்து சேர்ந்த இடம் குற்றாலம். இதான் பாஸ் நாம்ம தங்க போகிற ஹோட்டல். "குற்றால மாளிகை", மிதுன் என்னமோ ஸ்பெஷல் டிக்கெட், தங்கும் இடம் இலவசம்னு சொன்ன. இத பார்த்தா ஹோட்டல் மாதுரியே இல்லையே, பழைய கட்டடம் போல இருக்கு. அது வந்து! அந்த டிக்கெட் குற்றாலம் சுற்றி பார்க்க மட்டும்தான் பாஸ். வாங்க உள்ளே போகலாம் என்று பாலாவின் பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றான்.என்னது வரவேற்பு அறையில் யாரும் இல்லை, ஹலோ ஹலோ யாராவது இருக்கீங்களா.பாலா இங்கையே இருங்க நான் மேலே சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று படியில் ஏறுகிறான். மரத்தில்லான படியானத்தால் மிதுனின் காலடிசத்தம் நன்றாக கேட்டது. டேய் சொன்ன கேளு மேல போகாத, இந்த ஹோட்டல் வேண்டாம், வேற எங்கையாவது போகலாம். இருங்க பாஸ் சும்மா குழந்தை போல் பயந்துக்கொண்டு என்று முன்னேறி செல்கிறான். திடிர்னு பாலா நிற்கும் இடத்தில் இருந்து வலதுபக்க அறைகதவு திறக்கிறது கிரீச்சத்தத்துடன். ஒரு தடிமான உருவம், என்ன வேண்ணும் உங்களுக்கு என்ற கேள்வியுடன். நீங்க தான் மிதுனா, இல்லை நான் பாலா, மிதுன் உங்களை தேடி மாடிக்கு சென்று இருக்கிறான்.தம்பி யார் மாடிக்கு போறது என்று அதட்டல் குரல் அந்த அமைதியை குழைத்து மிதுனின் காதில் விழ அவசர அவசரமாக கீழ இறங்கி வருகிறான்.

                                            நீங்க தானா, இந்தாங்க சாவி, அறை என் 135, இன்னைக்கு ரூம்பாய் வரவில்லை, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க, என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த அறைக்குள் சென்றுவிட்டது அந்த உருவம். இருவரும் மேலே செல்கிறார்கள். ஒவ்வொரு அறையாக கடகிரார்கள். 132, 133, 134, 13..என்ன பாஸ், 134க்கு அப்பறம் 13னு இருக்கு, டேய் மடையா, 5 தலைகீழா தொங்குதுபார், சரி உள்ளே போ. பார்த்தீங்களா வெளியில தான் கேவலமா இருக்கு உள்ள நல்ல தான் மைண்டைன் பன்னிருகாங்க என்று சொன்ன மிதுனை கோவமுடம் முறைக்கிறான் பாலா, என்ன சொன்ன அந்த காலேண்டர் இருக்கிற தேதியை பார், மார்ச் 6, ஆறு மாதத்துக்கு முன்னாடி கிழித்து இருப்பார்கள் போல்.இந்த பேப்பர் அதற்கு அடுத்ததேதி, அனைத்துலும் தூசி.இப்படி ஒரு இடத்துக்கு ஸ்பெஷல் டிக்கெட்.உன்னை நம்பி ஒரு எடத்துக்கும் வரகூடாது மிதுன், என்று சொல்லிகொண்டே சோபாவில் அமர்கிறான் பாலா , பஸ் பயணம் முழுவதும் யோசித்தும் உங்களுக்கு ஒரு கதைக்கூடவா கிடைக்கவில்லை. இந்த முறை நீ ஒரு கதை சொல்லு எழுதிடுவோம். அமாம் உங்களுக்கு கதை சொல்லத்தான் நான்என் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு வந்தேன் பாருங்க, என்று அலுத்து கொண்டு வேணும்னா இந்த முறை ஒரு காதல் கதை எழுதலாம் என்ன சொல்றீங்க என்று மிதுன் கேட்க, இதுக்கு அப்பறம் நீங்க பேசுனீங்கன, உங்க மனைவிடம் அனைத்தையும் சொல்ல வேண்டியதுவரும் என்று பதில் உரைத்தான் பாலா . இவரும் காதலிக்கமாட்டார், காதல்க்கதையும் எழுதவும் மாட்டார் என்று முனுமுனுத்து கொண்டே, தனது பையில் இருந்து மதுபானம்களை எடுத்து அறையின் மைய பகுதியில் வெய்கிறான்.பாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா. எப்படா இதுஎல்லாம் வாங்குன, எனக்கு எதுவும் வேண்டாம் நீயே குடி, அளவா குடி என்று சிகிரட்டை பற்றவெய்து அந்த பழைய பேப்பரை புரட்டி கொண்டு இருக்கிறான். அனைத்தையும் கலந்துகுடிக்க ஆயுத்தம் ஆகும்போது யாரோ கதவை தட்டும் சத்தம்.யார் இந்தநேரத்தில், பாஸ் யாருன்னு பாருங்களேன் என்று கையில் கிளாஸ் உடன் , நீயா போய் பார்த்துக்கோ என்று பதில் கிடைக்கவே, கிளாஸ்ஐ  கிலே வெய்துவிட்டு கோவமாக கதவை திறந்தான்.

                                            வெளியில் யாரும் இல்லை, யார் கதவை தட்டியது என்று கேட்டுகொண்டே வெளியில்சென்றான் மிதுன், திடிர்னு அவன் பின்னால் இருந்து ஒரு உருவம், நீங்க மிதுன் தானே,பாலாவின் உதவியாளர். சார் இருகிறாரா அவரை பார்க்கணும். நீங்க யார்ருன்னு பதிலுக்கு கேட்க, நான் அவர் ரசிகர்களின் ஒருவன், பெயர் ராமன், இதே ஊர் தான்.  இது தான் என் முகவரி என்று ஒரு சீட்டை எடுத்து கொடுக்க,பாலா ரொம்ப பிஸி, இப்ப பார்க்க முடியாது, சரி நான் நாளைக்கு வருகிறேன் என்று  கிளம்பியவரை தடுத்த மிதுன், நாங்க இங்க வந்து இருக்கோம்னு, உங்களுக்கு யார் சொன்னார்கள், அதுவா சார், உங்க ஆபீஸ்க்கு போன் பண்ணிருந்தேன், அவங்க தான் நீங்க குற்றாலம் வந்திருகீங்க சொன்னாங்க, அப்பறம் இங்க ரூம்பாய்ட்ட கேட்டேன், ரூம் நம்பர் கொடுத்தான். ரொம்ப லேட் ஆகிடுச்சி நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன்னு கிளம்பிவிட்டார்.பாஸ் நம்ம பிரபலம் ஆகிடேவரும்,யாரோ ஒருவன் நம்ம கதை ரசிகனா,  நம்மள பார்க்கணும்னு வந்தான், லேட் ஆகிடுச்சி நாளைக்கு வரேன்னு கிளம்பிட்டான் என்று சொல்லிக்கொண்டு அவன் கொடுத்த சிட்டை பாலா முன் இருக்கும் டேபிளில் வைத்துவிட்டு, சரி நான் ஆரமிக்கிறேன். பாஸ் நீங்க எப்படி கதை எழுத ஸ்டார்ட் பண்ணீங்க என்று பேசிக்கொண்டு இருந்தான். சும்மா பேசிகிட்ட இருக்காதா என்று நாளிதழை புரட்டிகொண்டு இருந்த பாலா, சரி யாரோ வந்தாங்க சொன்னியே அவர் பெயர் என்ன, ஒ  அவரா ஏதோ அமன், சிச்சி ராமன் சொன்னாரு. நம்ம ஆபீஸ்க்கு போன் பண்ணி இருகார் பாராட்டு தெரிவிக்க, யாரோ நாம இங்க வந்து இருக்கோம்னு சொல்லிருகாங்க, அதை விடுங்க பாஸ் நீங்க கதை எப்படி எழுத... ஒரு சிப்ஸ் கடித்து கொண்டே கேட்டான்.

                                                   பேப்பர் புரட்டிகொண்டு இருந்த பாலா , டேய் நம்ம ஆபீஸ்ல உன்னையும் என்னையும் தவிர டீக்கடை பையன்தான் இருப்பான், அவனும் இன்று ஊரில் இல்லை, அப்பறம் யார் சொல்லிருப்பார்கள், தெரியவில்லை பாஸ். பழைய பேப்பர் படிக்கறத முதலில் நிறுத்துங்கள். பேப்பர் படித்துகொண்டு இருந்த பாலா அதிர்ச்சியாகி, அவர் பெயர் என்னனு சொன்னா, ஏங்க 10 தடவை சொல்லறதுக்கு அவர் பெயர் என்ன கீதசாரமா, ராமன் பாஸ். மிதுன் இங்க வா, இந்த பக்கத்தை பார். பிரபல ஹோட்டெலில் வாலிபர் மர்ம மரணம், பெயர் ராமன்னு போட்டுஇருக்கு.இந்த போட்டோவை பார் இவரையா நீ பார்த்தாய். இவரை மாதுரியும் இருக்கு இல்லாத மாதுரியும் இருக்கு. ஒழுங்கா சொல்லு மிதுன் அவர் என்ன சொன்னார்.. உங்களை பார்க்கணும் சொன்னாரு, நீங்க பிஸியா இருக்கீங்க சொன்னேன், அப்பறம் நம்ம ஆபீஸ்ல யாரோ இங்க வந்து இருக்கோம்னு சொல்லிருகாங்க, அப்பறம் இங்கே ரூம்பாய் கிட்ட நம்பர் வாங்கிட்டு வந்துருக்கார். அவ்வளவுதான் போய்ட்டாரு. மிதுன் இன்னைக்கு தான் ரூம்பாய் வரலன்னு சொன்னங்கலே, அப்பறம் இந்த பேப்பர் செய்திக்கும் இந்த காலேண்டர் தேதிக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம்.பாஸ் நீங்க சொல்றதா வெச்சி பார்த்த நான் பேய்யோடவ பேசிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் சும்மா இரு.எதற்கும் வரவேற்பு அறைக்கு ஒரு போன் பண்ணிப்பார், என்ன பாஸ் போனும் வேலை செய்யல.வா கீழப்போய் ரூம்பாய் இருக்கான பார்த்துவிட்டு வருவோம். இல்ல நான் வரல, நீங்களே போய் பார்த்துட்டு வாங்க, நான் மீதியை முடிக்கிறேன் அப்பதான் நான் தெளிவா  இருப்பேன்.

                                        பாலா தனியாக வரவேற்பு அறையை நோக்கி செல்கிறான், ஒரு 5 நிமிடம் மிதுன் தனியாக குடித்து கொண்டுஇருந்தான். டிவி ஆன் செய்தான், "நானே வருவேன் " பாடல் ஒலித்து கொண்டுஇருந்தது. அமாம் இதுவேற என்று அணைத்துவிட்டு,பாலா உண்மையதான் சொல்கிறானா, இல்லை கதைக்காக பொய் சொல்கிறானா. அந்த பேப்பர் பார்க்கிறான், அந்த சீட்டையும் பார்க்கிறான், அந்த சிட்டில் ஒன்றும் இல்லை, அவன் கையில் இருக்கும் மது அதன்மேல் கொட்டியது. அதை ஓரமாக வெய்துவிட்டு. எப்படி சீட்டில் இருப்பது அழிந்திருக்கும், ஒருவேளை மது கொட்டியதல்தானோ. அந்த காலெண்டரை பார்க்கிறான், காற்றில் அது பறக்கிறது. பக்கத்தில் இருக்கும் தொலைபேசியின் திடீர் சத்தத்தால் வெலவெலத்து போன்னான். பாலா சொல்லிருப்பான் சரி செய்து இருப்பார்கள் போல என்று ஹலோ ஹலோ என்று சொல்ல எதிர்  முன்னையில் பதில் இல்லை. சும்மா செக் பண்ணிருபாங்க போல, கொஞ்ச நேரத்துல, ஒரு கோர்ட்டர் சரக்கு வேஸ்ட் ஆகிடுச்சே, தனது பையில் துலாவி, இன்னொரு பாட்டிலெய் எடுக்கிறான்.மறுபடியும் ஒலிகிறது தொலைபேசி, எடுக்கிறான், எதிர்முனையில் ஒரு பையனின் குரல்.சார் போன் வொர்க் ஆகலன்னு சொன்னாங்க அதான் பண்ணேன், எதாவது வேணுனா சொல்லுங்க வாங்கிட்டு வரேன், அப்படியா ரொம்ப நன்றி தம்பி, இரண்டு வாட்டர் பாட்டில், அப்பறம் 5 புரோட்டா வாங்கிட்டுவாபா. அப்படியே பணம் பாலா கிட்ட வாங்கிக்கோ.இணைப்பு துண்டிக்கபடுகிறது.என்ன அவசரம் இந்த பையனுக்கு என்று முனுமுனுத்து கொண்டே இருந்தான்.

                              படார் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே வருகிறான் பாலா .நீங்க தானா பாஸ் கொஞ்சம் நேரத்துல பயந்துட்டேன். என்ன பாஸ் சொன்னான் அந்த பையன், உங்களுக்கு என்ன வாங்கிட்டு வர சொன்னிங்க. எந்த பையன் என்று கொஞ்சம் நடுங்கிய குரலில் கேட்கிறான் பாலா .நீ ரொம்ப ஓவரா குடிச்சிட்ட, கீழ யாரும் இல்லைன்னு நானே வெறுப்பில் வருகிறேன். பாஸ் என்ன பயமுடுதுனும் நெனைகிறீங்க , அதுக்கு எல்லாம் அசர மாட்டான் இந்த மிதுன்.ஒழுங்கா போய் படு என்று சத்தம் போடுகிறான். என்னாச்சி இவருக்கு,பாலா நீங்க போனதுக்கு அப்பறம் ஒரு போன் வந்துது, முதல்தடவை யாரும் பேசவில்லை, இரண்டாம் முறை ஒரு பையன் பேசினான். உங்ககிட்ட பணம் வாங்கிக்கசொல்லி இரவு சாப்பாடு வாங்கிவர சொன்னேன். மிதுன் எனக்கு ஒன்னும் புரியவில்லை, நான் கிழே சென்று பார்க்கும்போது யாரும் இல்லை. ஒரு அறையில் இருந்து உருவம் வந்தாரல்லவா, அந்த அறையை தட்டினேன், பதிளில்லை. வரவேற்பு அறையில் இருக்கும் போனில் இருந்து, நமது ஆபீஸ்க்கு  போன் பண்ணேன், யாரும் எடுக்கவில்லை. அந்த இடத்தைவிட்டு கிளம்பும்போது, அந்த அறையில் இருந்து உனது குரல் கேட்டது. மெதுவாக சென்றேன், நீ என்னுடன் ராமன் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தது கேட்டது.கதவை வேகமாக தட்டினேன், பதில் இல்லை. இங்கு வந்தால்  நீ யாரோ ஒரு பையனிடம் பேசிக்கொண்டு இருந்தாய் என்று சொல்கிறாய். வேகவேகமாக தனது லேப்டாப் எடுத்து ஒரு புகைப்படத்தை எடுக்கிறான். மிதுன் நீ பார்த்தது இவர் தானா என்று பார். கொஞ்சம் இருங்க பாஸ், வேகமாக குளியலறைக்கு சென்று முகத்தை அலம்பி, நெற்றி நிறைய விபுதி பூசிக்கொண்டு இப்ப சொல்லுங்க பாஸ்.இவன் தான் பாஸ், இந்த புகைப்படம் எப்பொழுது எடுத்தது. மார்ச் 5. சரியாக சொல்லவேண்டும் என்றால் ஒரு ஆறு மாதத்துக்கு முன், அந்த காலெண்டரில் இருக்கும் தேதி மார்ச் 6, இந்த நியூஸ் பேப்பர் மார்ச் 7.பாலா இவனுக்கு பக்கத்தில் இருக்கும் நபர் யார், ஹ்ம்ம் ..நாம வரவேற்பு அறையில் ஒரு நபரை பார்த்தோமே அவரைப்போல் இல்லை.. ஆம். சரிதான் உன்முளையும் வேலை செய்கிறது. ஒரு சிறு பையனும் அருகில் இருக்கிறான்.

                                  மிதுன் இங்கே என்னமோ நடக்குது, போலீஸ் ஸ்டேஷன்க்கு போன்பண்ணு. நம்பர்? ஒரு நிமிடம், தனது கைபேசியை எடுக்கிறான், நெட்வொர்க் இல்லை, 100 டயல் பண்ணி லோக்கல் ஸ்டேஷன் நம்பர் கேள்.மிதுன் டயல் செய்கிறான். பல நிமிடம் ஒழிகிறது, இறுதியில் ஒரு பெண் குரல், மேடம் நாங்க எழுத்தாளர்கள், இங்கே குற்றாலம் மாளிகையில் தங்கிருக்கோம், இங்க பல அமானிஷா செயல்கள் நடக்கிறது. லோக்கல் ஸ்டேஷன் நம்பர் கொடுங்க, ரொம்ப பயமா இருக்குது. சார் யார்நீங்க, இரவு நேரத்தில் போன் செய்து போலீஸ் ஸ்டேஷன் அது இதுன்னு. இது போலீஸ் கண்ட்ரோல் ரூம் தானே,  இன்னொரு தடவை போன் பண்ணா நானே கண்ட்ரோல் ரூம்க்கு போன் பண்ண வேண்டியதிருக்கும் என்று இணைப்பு துண்டிக்க படுகிறது.பாலா பயத்துல நம்பர் மாத்திபோட்டுடேன், இன்னொரு முறை பண்றேன், திரும்பவும் போன் வொர்க் ஆகலை.பாலாவின் கைபேசி ஒழிகிறது, பெயர் வரவில்லை, எச்சரிகையுடன் எடுக்கிறான். மறுமுனையில் அண்ணா உங்ககிட்ட அவர் குடிக்காம பார்த்துக்க சொன்னா, அவர் என்னன்னா குடிச்சிட்டு எங்க அம்மா வீட்டுக்கு போன் பண்ணி இருகார்.காலையில் அவர பேச சொல்லுங்க. என்னடா போலீஸ்க்கு போன் பண்ணசொன்ன உன் மனைவிக்கு போன் பண்ணிருக்க, பாஸ் அவங்க அம்மாவீட்டு நம்பர் எனக்கு தெரியாது, உங்க போன்ன இங்க கொடுங்க, பாஸ் இது என் வீட்டு நம்பர். வா கிழே செல்லலாம், 134, 133, 132..மாடியில் இருந்து கிழே இறங்குகிறார்கள், காலடி சத்தமும், தவளை சத்தத்தை தவிற வேற சத்தமில்லை. மயான அமைதி.வரவேற்பின் அறையில் இருக்கும் தொலைபேசி முகவரி எடுத்து, காவல்நிலையத்துக்கு அலைகிறார்கள். எதிர்முனையில் ஒரு ஆணின் குரல், நிலைமையை எடுத்து உறைகிறான். கவலை படாதீர்கள், இன்னும் 10 நிமிடத்தில் அங்கு வருகிறேன்.மிதுன் நீ சென்று நமது பைகளை எடுத்துக்கொண்டு வா. முறைத்து கொண்டு மேலே செல்கிறான். 133, 134, 13...அய்யஹோ 13 ரொம்ப மோசம்ப என்று கதவை திறந்து உள்ளே செல்கிறான்.

                                                        வரவேற்பு அறையின் எதிர்புறத்தில் இருக்கும் அறையில் இருந்து மிதுனின் அலறல் சத்தம். அறை கதவை உடைக்க முயல்கிறான். சத்தம் அதிகமாகிறது, திடிர் என்று அந்த பெண்ணின் குரல் அதே வசனம், அடுத்து அந்த பையனின் குரல், மீண்டும் அலறல் சத்தம்.பாலா வேகமாக 135'ம் அறைக்கு செல்கிறான். மிதுன், யாருடன் போன் பேசிக்கொண்டு இருக்கிறாய் என்றது பாலாவின் குரல், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், இன்னும் 5 நிமிடத்தில் வருகிறாராம். பாலா தொலைபேசியை வாங்குகிறான், எதிர் முனையில் அந்த பெண்ணின் குரல் கேட்கிறது. சட்யென்று வெய்துவிட்டு மிதுனை அழைத்துக்கொண்டு அணைத்து  பொருள்களையும் எடுத்துக்கொண்டு கிழே விரைகிறார்கள். மிதுனின் தொலைபேசி ஒலிக்கிறது, எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சார் அருகில் வந்துவிட்டோம் என்று சொல்லி இணைப்பு துண்டிக்கபடுகிறது. இருவரும் ஹோடேல்லை விட்டு வெளிய செல்ல முயற்சி செய்கிறார்கள். இரும்பு சங்கிலியால் பூட்டி இருக்கிறது. மீண்டும் வரவேற்பு அறையில் இருக்கும் போன்னை எடுக்கிறான் பாலா. திடிர்னு வரவேற்பு மேடையின் அடியில் இருந்து அந்த தடிமனான உருவம். இந்த நடுராத்திரியில் எங்கே செல்கிறிர்கள் என்று கேட்க. மிதுன் மயக்கமிட்டு கிழே விழுகிறான். இவ்வளவு நேரம் எங்கு இருந்தீர்கள் என்று பாலா பதிலுக்கு கேட்க, இங்கே தான் இருந்தேன். சிறிது நேரம் வெளியில் சென்றிருந்தேன்.மிதுனை தூக்கி அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்துவிட்டு, இந்த அரை கதவை திறக்கிறீர்களா? ஏன் என்றது அந்த உருவத்தின் குரல். என் கார்டு உள்ளே விழுந்துவிட்டது, அதை எடுக்கணும். நீங்கள் இங்கே இருங்கள். நான் சென்று எடுத்துவருகிறேன். அந்த அறை திறக்கப்படுகிறது, அந்த உருவம் உள்ளே செல்கிறது, வெளியில் வாகனம் வரும் சத்தம் கேட்கிறது. மிதுன் மயக்கம் தெளிகிறான். அறைக்கதவு மூடுவதற்குள் பாலா உள்ளே நுழைகிறான்.வெளியில் போலீஸ் வாகனம் வந்து நிற்கிறது.

                                                மிதுன் வரவேற்பு அறையில் இருக்கும் சாவியை எடுத்துக்கொண்டு வாசற்கதவை நோக்கி விரைகிறான். அதற்குள் ராஜாராமன் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைகிறார். நீங்கத்தான் எழுத்தாளரா! சார் நீங்க?. என்னாச்சி நீங்கதானே கால் பண்ணீங்க. ஆமாம், ஆனா நீங்க சில நேரத்துக்கு முன் எங்கள் அறைக்கு வந்தீரல்லவா.நானா, என்ன ரொம்ப குடிசிருகீங்களா.பாலா எங்கே, இந்த அறைக்குள்தான் சென்றிருப்பார்.ராஜாராமன் கதவை திறக்க முயல்கிறான். உள்ளே தொலைபேசி ஒலிகிறது,பாலாவின் அலறல் சத்தம். கதவை உடைத்து உள்ளே செல்கிறார்கள். தொலைபேசி ஒலிகிறது. சுவரில் ஒரு பெண்ணின் படம் மாலையுடன் , சற்றுத்தள்ளி ஒரு சிறுவனின் புகைப்படம், அதனை தொடர்ந்து அந்த தடிமன்னான உருவத்தின் படம்.பாலா பாலா என்று கத்திகொண்டே செல்கிறான் மிதுன். திடிரென்று ராஜாராமனின் புகைப்படம் , அதற்கு அடுத்தாற்போல் சிறிது நேரத்துக்கு முன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருபதற்போல் பாலாவின் புகைப்படம். திரும்பிசென்று ராஜாராமனை பார்க்கிறான் யாருமில்லை.திரும்பி செல்கிறான், கிழே ஏதோ திரவத்தை  மிதித்தார் போல் உணர்கிறான். உற்று நோக்கினால் இரத்தம், அருகில் பாலாவின் உடல். கழுத்தில் வெட்டுகாயம், திரும்பி வாசற்கதவை நோக்கி ஓடுகிறான்.கதவு  திறக்க முடியவில்லை.பாலாவின் உடலை நோக்கி வருகிறான்,உடலும் அங்கு இல்லை. கண்ணிருடன் தேடுகிறான். உடல் இழுத்து சென்றதுப்போல் ஒரு தடம். அருகில் இருந்த ஒரு கம்பியை எடுத்துக்கொண்டு அந்ததடத்தை பின்தொடர்கிறான் மிதுன். அந்த வழி ஒரு அறைக்குள் செல்கிறது, அங்கு பாலாவின் உடல், மிதுன் குடித்து மிச்சம் இருந்த மது பாட்டில்கள் அருகில் இருகின்றது!!!. கதறி கொண்டு உடலைப்பற்றி அழுகிறான். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.கதவின் திசையை நோக்கி வேகமாக ஓடுகிறான். கதவை திறக்கமுடியவில்லை. கதறுகிறான், தொலைபேசி ஒலிகிறது.கதவு தானாக திறக்கிறது, ஒரு உருவம்மிதுன் மேல் விழுகிறது.

                               குற்றாலம் வந்துவிட்டது என்று நடத்துனரின் குரல்கேட்டு கொண்டு இருக்கிறது, தன்மேல் விழுந்த பையை தட்டிவிட்டு அலறியடித்து கொண்டு எழுகிறான் மிதுன். சற்று தூரத்தில் பாலா அவனது பையை எடுத்துக்கொண்டு இருப்பதை கவனிக்கிறான். டேய் மிதுன் என்னத்த டா குடிச்ச இப்படி துங்கிருக்க. சிக்கிரம் எழுந்து வா போகலாம். இருவரும் நடக்கிறார்கள். இதானே அந்த ஹோட்டல் என்று பாலா நின்று பெயர்பலகை  பார்க்க "குற்றால மாளிகை", உள்ளே செல்கிறான் பாலா , பயத்துடுன் அவனை பின்தொடர்கிறான் மிதுன். தடிமனான உருவம் அவர்களை வரவேற்று அறைக்கு அழைத்து செல்கிறது. அதே மரத்தில் ஆன மாடிப்படி, மேலேறி அறைக்கு அழைத்து செல்கிறது அந்த உருவம். . ஒவ்வொரு அறையாக கடகிறார்கள் 133, 134, 13

                                                   முற்றும்!!!

Friday, August 22, 2014

சென்னை பயணம்

சென்னையின் முன்றாவது நுற்றாண்டில் - எனது முதல் தசாப்தம் 


மெட்ராஸ்(சென்னை) 
                                                    படித்தவர்களும், படிக்காதவர்களும் வருவது சென்னை. சம்பாரிக்க நினைபவர்களும் , முதலீடு பண்ண நினைபவர்களும் வருவது சென்னை, நடிப்பை நம்பி வருபவர்களும், பணத்தை நம்பி நடிக்க வருபவர்களும் தேன்றுஎடுபது சென்னை. சுற்றி பார்க்க வருபவர்களும், ஏமாற்றி பிழைக்க வருபவர்களும் சென்னைதான்... பல மொழி பேசும் மனிதர்கள், சமையல் என்ற வார்த்தைக்கு ஆண்களுக்கு அர்த்தம் புரியவைக்கும் இடம். சேவல் பண்ணையின் தலை நகரம். எவ்வொரு நிகழ்சிக்கும்ஆடைகள் எடுக்க தி.நகர் வரும் மக்கள். எந்த படிப்பு படித்தாலும் அவர்களின் அடுத்த அடி சென்னை. பல வரலாற்று சிறப்புகளை கொண்ட சென்னையின் அடையாளங்கள், சென்ட்ரல் ரயில் நிலையம், கன்னிமாரா பொது நூலகம், ரிப்பன் கட்டிடம், மெரினா, கூவம்,வண்டலூர் பூங்கா, வள்ளுவர் கோட்டம், விமான நிலையம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம். சென்னையின் 375 வயதில் எனது 10 வருட பயணம்

                                


                                அதிகாலை சூரியன், டி சைக்கிள், மாநகர பேருந்துகள், மக்கள் கூடம், கையில் ஒரு trolley, அருகில் நண்பன், மனதில் கனவுகள், பல பேரை வாழ்க்கை கொடுத்த சென்னை, என்னையும் வெளி உலகத்துக்கு தெரிய வைக்கும் என்ற நம்பிகையுடன் 2005 ஜூன் 13 CMBT இறங்கினேன் !!! பல கனவுகளுடன் வரும் பல மனிதர்கள் போல தான் நானும் வந்தேன் ...ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மனிதர்கள், என்னை யார் என்று எனகே படி படியாக உணர்த்தியது. .இது வரை எதுவும் பெரிய சாதனைகள் செய்யவில்லை என்றாலும், சிறிய ஆசைகளை பூர்த்தி செய்தது சென்னை..

                                  100 சதவிதம் புத்துணர்ச்சியுடன் வந்த நான் அதி விரைவாக சென்னை பிடிக்காமல் போனது. வெளி சாப்பாடு ஒரு சின்ன ஹோட்டல் வயற்று பிரச்சனை ஆரமித்தது 20% Interest போச்சி, வெளியில் சுத்தினது, வெயில் கரும் புகை இன்னொரு 20% போச்சி, ஒரு வீடு எடுத்து இருந்தாங்க பாருங்க அரும்பாக்கம் ல, அப்பப்பா, 30 % போச்சி. இந்த சைடு அமைந்தகரை இன்னொரு சைடு அரும்பாக்கம். நடு சென்ட்டர் ல வீடு, பக்கத்துல மாட்டு கொட்டகை, திறந்தவளி சாக்கடை நேரடி இணைப்பு கூவம்துடன். மூன்று மதாம்கள் வெட்டியாக வாடகை கொடுத்து அங்க யாருமே இல்லாம நண்பனின் கோடம்பாக்கம் வீட்டில் தங்கினோம் ... பூட் போர்டு , டபுள் டெக்கர் பஸ் 10% Interest வந்துச்சி , அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் திருவிழா (இரவு Stage டான்ஸ்)10% Interest வந்துச்சி ...இப்படியே மேலயும் கிலையும் போய்ட்டு இருந்த GRAPH, திடிர்னு நாலவது நாள் சென்னை வேண்டாம்னு கெலம்பி ஊருக்கு போய்டேன், என்ன செய்வது அடுத்த ஒரு வாரத்தில் அதே சென்னை.

               
                                           கோடம்பக்கம்துல வீடு எடுத்தோம், வெளியில் டி கடை,கொஞ்ச தூரத்தில் HSB, கையில் கொஞ்ச பணம், நெறைய லட்சியம்...எந்த Interview இருந்தாலும் போய்டுவோம. ஏதோ Interview போறதா டூர் போற மாதுரி, கிட்ட தட்ட 57 Interview ...ஏறத்தாள 50 Interview கூடவே வந்தான் என் நண்பன். கோடம்பக்கம்னலே சினிமா, நடிகர்கள்..எதாவது ஒரு சைடு ஆர்டிஸ்ட் பார்த்தேலே ரொம்ப பேசுவோம்...ராம் theater காமெடி மறக்க முடியாத ஒன்று.. "I am Back"... D70 to Ambattur Estate'ல ஒரு Interview Only Referral, அங்க வந்த ஒரு அச்சொசியாடே பரிந்துரை பண்ண சொன்னேன், அந்த புண்ணியவான் பரிந்துரை பண்ணான்..அதுக்குள்ள Enrolling முடிந்தது. கிண்டி Alexander sq ஒரு Interview நடக்குது அங்க போனு சொன்னார். உடனே கிண்டி பஸ்ல போய் அங்க Interview அட்டெண்ட் பண்ணி கடைசி ரவுண்டு போன்ன அங்கையும் Referral... கோவிந்தா. மறுநாள் வீட்டு Owner கண் கலங்கி அன்னைக்கு தான் பார்த்தோம்..அந்த அளவுக்கு சுத்தமா வெச்சிருந்தோம். என்னைக்கு Bachelor ஒரு வருஷத்துக்கு மேல ஒரே வீட்டுல இருந்து பார்த்து இருக்கீங்க..இதுக்கு மேல அவர கஷ்ட படுத்த கூடாதுனு வீட்டை காலி பண்ணிட்டு நண்பனின் மடிப்பாக்கம் வீட்டுக்கு சென்றோம்.



                          வேலையே இல்லாம வெட்டியா இருந்தாலும் எதிர்  வீட்டு பாட்டி, வீடு ஒன்னு வெலைக்கு வந்திருக்கு லோன் போட்டு வாங்கிரியனு கேட்டாங்க.. 2010ல அதே வீடு மூன்று மடங்கு விலையில். மடிப்பாக்கம் சென்னைக்கு வெளியில மழை பெய்தாலே இங்க தண்ணி  நிக்கும். November 2005, செம மழை, வடபழனிக்கு ஒரு  Interview  போன்னோம், interview cancelled..ரூம்க்கு கேளம்புலம்னு இருக்கும் பொது, நண்பன் தீடிர்னு ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டான், CASH இல்லைன்னு போன ATM வொர்க் வொர்க் ஆகல, இன்னொரு ATM'ல எடுக்கலாம்னு போன அதுவும் வொர்க் ஆகல... அய்யயோ .. புல்லா  நெனஞ்சிடு  இன்னொரு  ATM நோ லக்.Purse'ல 5 RS, ஷேர் ஆட்டோ 10 Rs கேட்டான், D70 -Velachery 5 RS ticket போய்டுச்சி, Velachery ATM'ல எடுத்துக்கலாம் நெனச்சேன்,..மழை மட்டும் இல்ல நேரமும் சுத்தி சுத்தி அடிச்சிடு...அங்கயும்  வொர்க் ஆகல.டிக்கெட் எடுக்காம பஸ் ஏறலாம்னு வெயிட் பண்ணேன். Route 51K  ஏறுனா கண்டக்டர் டிரைவர் தவிர யாரும் இல்லை...என் கூடஒரு ரெண்டு பேர் ஏறுனாங்க. கண்டக்டர் டிக்கெட் டிக்கட்னு கேட்டுகிட்டே வந்தாரு... தம்பி டிக்கெட் .. என்ன நெனச்சாரோ திரும்பி போய்ட்டாரு.. மடிபாக்கதுல இறங்குனா ஹோட்டல் இல்லை, ஹோட்டல் இருந்தாலும் காசு இல்ல.. ஆகக ஒப்டிஒன் Acct வெச்சிருந்த வீட்டு சாப்பாடு..அதுவும் நண்பன் கணக்கு தான்..அதுக்கு சுமார் 1 KM நடக்கணும் ..முட்டி கால் மேலுக்கு தண்ணி ...தண்ணியில் நடந்து அவ்வளவு தூரம்  போய் சாப்டுட்டு.. நைட் சாப்பாடும் எடுத்துகிட்டு, அவங்கள்ட்ட கதை பேசிட்டு .. என்ன பேசுனோம்னு மறந்துடுச்சி ...




                                        வடபழனில  அருமையான வீடு எடுத்தோம் , சூப்பர் வீடு .. owner வீட்டு மேல.. சிகிரத்துல காலி பண்ண போறது உறுதி. பக்கதுல ஒரு  PRODUCER வீடு கட்டுமான பணயில்  இருக்குனு பேசிக்கிட்டு இருப்போம்...ஒரு நாள்  நடிகர் Vijay வந்திருக்கார்னு ஒரு புரளி  கெழப்பி விட்டான் ஒரு சண்டாளன் போய்ட்டான்.. மதியம்  அங்கையும் இங்கையும்  வெளிய்லையே  சுத்திட்டு இருந்தது தான் மிச்சம் . நண்பன் Vijay'n  பரம விசிறி  சும்மா  தேடி தேடி JAY JAY மாதவன்  மாதுரி சுத்துனான்..மீண்டும் மாற்றம் தங்குமிடத்தில்.. அதே வடபழனில புதிய ரூம், இதோ போகுது பார் நரி , கோழி, காக்கா , சரணளையதுல இருக்க வேன்டியதலாம் இங்க இருங்குங்க  தம்பிகளா அண்ணாச்சி வந்திருக்கேன் டா..அண்ணன் எவள்ளவு சம்பாரிபாறு,   விடிய விடிய பேசிட்டு காலையில  4  மணிக்கு தூங்கிவிட்டு 11 மணிக்கு  எழுந்து டி குடிக்க போகும் போது.. பாவம் பசங்க.. பக்கத்துக்கு வீட்டுகாரங்க குரல், நைட் ஷிபிட் வேலை முடித்து பசங்க தூங்கிட்டு இருக்கும் பொது இப்படி கரண்ட் கட் பண்ணிடங்கலே வருத்த பட்டங்க... சின்ன ரூம்ல 14 பேர் இருந்தோம், அமெரிகாவில் இருந்து நண்பன் வந்தப்ப ஒரு வாரம் முழுக்க என்ஜாய்மென்ட், வடபழனியின் டையாளங்களின் கமலா  திரைஅரங்கம்AVM Rajeswari திரைஅரங்கம்,  வடபழனி  முருகன்  கோவில், SSR  திரைஅரங்கம்,  பார்வதி மெஸ்,தேவி கருமாரி காம்ப்ளெக்ஸ்,சாலிக்ராமம் தட்ட மீன் ஹோட்டல்...  வாரம் ஒரு முறை எங்களின் அடையாளங்கள் பதிவு செய்வோம்!.. ஆபீஸ் செல்ல இரண்டு வழிதடம், 17 M, 17E. 17 M - வெறும் ஆபீஸ் போறவங்க மட்டும் தான் இருபங்க, வள்ளுவர் கோட்டம்  பாதி பேர் இறங்கிடுவாங்க, அடுத்தது பல்ம்க்ரோவே ஹோட்டல் பாதி பேர், நம்ம ஸ்டாப்பிங் LIC காலியா இருக்கும், அதே 17E ஏறுனா லயலோ கல்லூரி, எதிராஜ் கல்லுரி, காயிதே மில்லத் கல்லூரி- நம்ம ஸ்டோபிங்











      தல படமோ, தலைவர் படமோ முதல் நாள் முதல் காட்சி என்றால் காசி திரைஅரங்கம், ரோகினி திரைஅரங்கம், உதயம் திரைஅரங்கம், இந்த திரைஅரங்கதில் தான் பார்க்க வேண்டும். சும்மா கை தட்டி, ஆட்டம் போட்டு, விசில் அடித்து ஒரே ரகளை பண்ணுவார்கள்.  அதே போல் சென்னையின் முக்கிய இடத்தை சுற்றி பார்க்கணும்னா 5E ரூட் ல போன்ன பார்த்துடுலாம். வடபழனியில ஆரமித்து அசோக் நகர் ,மேற்கு மாம்பழம், KK நகர் , நெசபாக்கம் அப்படியே போகும் பெசென்ட் நகர் வரைக்கும். சென்னைக்கு வருகிற யாருக்கும் பிடிக்காத ஒன்று கூவம், சென்னையை சுற்றி ஓடும், கூவத்த சுற்றி குடிசைகளும் அதை சுற்றி பல மாடி வீடுகளும் இருக்கும்.


மெரினா - திவுதிடல் 
                          சென்னை என்று சொன்னுடன் அனைவர்க்கும் முதலில் மெரினா கடற்கரை பார்க்க வேண்டும் என்று ஒரு அசை இருக்கும். எங்களது மெரினா பயணம் வாரம் ஒரு முறை இருக்கும். போகின்ற வழியில் வரும் ஜெமினி மேம்பாலம், ஸ்டெல்லா மேரி கல்லூரி,.. மெரினா பல தரப்பட்ட மனிதர்களை பார்க்க முடியும், மாங்காய் , கார பொறி , மிளகாய் பஜ்ஜி , ஐஸ் .. சுட்ட சோளம் . மெரீனாவில் இருந்து திரும்பி வரும் பொது அப்படியே ராயபேட்டை ரொட்டி அண்ட் சிக்கன் தந்துரி  வங்கிட்டு வருவோம்.அடுத்த பெசன்ட் நகர் கடற்கரை சும்மா ஹை டேக் பீச்.

ஒரு நாள் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றேன், பார்கிங்கும் ரயில் நிலையத்துக்கும் ஒரு விதமான சிமெண்ட் ஷீட் வைத்து அடைத்து இருந்தார்கள். ஒருவன் பேச்சை கேட்டு பார்கிங் பண்ணிட்டு பக்கத்தில் இருந்த ஷீட் ஓட்டையில் உள்ள புகுந்து ரயில் நிலையம் சென்றோம். இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துகொண்டு இருத்த ஒரு ஆபீசர் , பிளாட்போறம் செல்லும் முன் தடுத்தார். பிளாட்போறம் டிக்கெட் கேட்டார். உங்கள பார்த்த சந்தேகமா இருக்கு அந்த ஓட்டை வழியா வறீங்க.. அப்பறம் ஒரு அர மணி நேரமா பேசுனாலும் செலவு வெச்சிட்டான் கூட இருந்தவன்.


                                            நண்பன் தனது chat தோழிய பார்க்க Spencer போய்டு பலப் வாங்கிட்டு அதை எங்கள்ட்ட சொல்லாமா மறைக்க முயற்சி செய்து சிறிது நேரத்தில் ரூம் முழுவதும் ஒரே சிரிபொலிதன். ஒரு முறை நண்பனை நந்தனம் அழைத்து செல்கிறேன் என்று தி.நகர் வரைக்கும்அழைத்து போய் அங்க இருந்து வழி தெரியாமல் அவனிடம் திட்டு வாங்கிகொண்டு பல்பு வாங்குனது, 

அடுத்தது வடபழனியில் இருந்து விமானநிலையம் செல்லும் வழியில் கத்திபாரா மேம்பாலம் அருகே குழம்பி எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டு பல்பு வாங்கினது. அடுத்தது புதிய வீடு எடுத்தது அண்ணா நகர் கிழக்கு, அந்த பகுதிக்கு அன்று வரை சென்றதில்லை, ஈசி ஆனா இடத்துகே வழி தெரியில, இதுல எனக்கு  வந்த சோதனை.. ஒரு முக்கிய காரியமாக உடனடியாக ஆபீஸ் போக வேண்டியதுகிவிட்டது.விடிய்காளையில் ஒரு 5 மணிக்கு அண்ணா நகர்ல இறங்க வேண்டிய இடம் தெரியாமல் ஒரு மணி நேரமா சுத்தி சுத்தி வந்தேன். 

பயணங்கள் தொடரும்!!!

          எழுத்துநடையும், தமிழ் பிழையும் மெதுவாக திருத்திகொள்கிறேன். 
நன்றி 
சிவா