சென்னையின் முன்றாவது நுற்றாண்டில் - எனது முதல் தசாப்தம்
மெட்ராஸ்(சென்னை)
படித்தவர்களும், படிக்காதவர்களும் வருவது சென்னை. சம்பாரிக்க நினைபவர்களும் , முதலீடு பண்ண நினைபவர்களும் வருவது சென்னை, நடிப்பை நம்பி வருபவர்களும், பணத்தை நம்பி நடிக்க வருபவர்களும் தேன்றுஎடுபது சென்னை. சுற்றி பார்க்க வருபவர்களும், ஏமாற்றி பிழைக்க வருபவர்களும் சென்னைதான்... பல மொழி பேசும் மனிதர்கள், சமையல் என்ற வார்த்தைக்கு ஆண்களுக்கு அர்த்தம் புரியவைக்கும் இடம். சேவல் பண்ணையின் தலை நகரம். எவ்வொரு நிகழ்சிக்கும்ஆடைகள் எடுக்க தி.நகர் வரும் மக்கள். எந்த படிப்பு படித்தாலும் அவர்களின் அடுத்த அடி சென்னை. பல வரலாற்று சிறப்புகளை கொண்ட சென்னையின் அடையாளங்கள், சென்ட்ரல் ரயில் நிலையம், கன்னிமாரா பொது நூலகம், ரிப்பன் கட்டிடம், மெரினா, கூவம்,வண்டலூர் பூங்கா, வள்ளுவர் கோட்டம், விமான நிலையம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம். சென்னையின் 375 வயதில் எனது 10 வருட பயணம்
அதிகாலை சூரியன், டி சைக்கிள், மாநகர பேருந்துகள், மக்கள் கூடம், கையில் ஒரு trolley, அருகில் நண்பன், மனதில் கனவுகள், பல பேரை வாழ்க்கை கொடுத்த சென்னை, என்னையும் வெளி உலகத்துக்கு தெரிய வைக்கும் என்ற நம்பிகையுடன் 2005 ஜூன் 13 CMBT இறங்கினேன் !!! பல கனவுகளுடன் வரும் பல மனிதர்கள் போல தான் நானும் வந்தேன் ...ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மனிதர்கள், என்னை யார் என்று எனகே படி படியாக உணர்த்தியது. .இது வரை எதுவும் பெரிய சாதனைகள் செய்யவில்லை என்றாலும், சிறிய ஆசைகளை பூர்த்தி செய்தது சென்னை..
100 சதவிதம் புத்துணர்ச்சியுடன் வந்த நான் அதி விரைவாக சென்னை பிடிக்காமல் போனது. வெளி சாப்பாடு ஒரு சின்ன ஹோட்டல் வயற்று பிரச்சனை ஆரமித்தது 20% Interest போச்சி, வெளியில் சுத்தினது, வெயில் கரும் புகை இன்னொரு 20% போச்சி, ஒரு வீடு எடுத்து இருந்தாங்க பாருங்க அரும்பாக்கம் ல, அப்பப்பா, 30 % போச்சி. இந்த சைடு அமைந்தகரை இன்னொரு சைடு அரும்பாக்கம். நடு சென்ட்டர் ல வீடு, பக்கத்துல மாட்டு கொட்டகை, திறந்தவளி சாக்கடை நேரடி இணைப்பு கூவம்துடன். மூன்று மதாம்கள் வெட்டியாக வாடகை கொடுத்து அங்க யாருமே இல்லாம நண்பனின் கோடம்பாக்கம் வீட்டில் தங்கினோம் ... பூட் போர்டு , டபுள் டெக்கர் பஸ் 10% Interest வந்துச்சி , அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் திருவிழா (இரவு Stage டான்ஸ்)10% Interest வந்துச்சி ...இப்படியே மேலயும் கிலையும் போய்ட்டு இருந்த GRAPH, திடிர்னு நாலவது நாள் சென்னை வேண்டாம்னு கெலம்பி ஊருக்கு போய்டேன், என்ன செய்வது அடுத்த ஒரு வாரத்தில் அதே சென்னை.
கோடம்பக்கம்துல வீடு எடுத்தோம், வெளியில் டி கடை,கொஞ்ச தூரத்தில் HSB, கையில் கொஞ்ச பணம், நெறைய லட்சியம்...எந்த Interview இருந்தாலும் போய்டுவோம. ஏதோ Interview போறதா டூர் போற மாதுரி, கிட்ட தட்ட 57 Interview ...ஏறத்தாள 50 Interview கூடவே வந்தான் என் நண்பன். கோடம்பக்கம்னலே சினிமா, நடிகர்கள்..எதாவது ஒரு சைடு ஆர்டிஸ்ட் பார்த்தேலே ரொம்ப பேசுவோம்...ராம் theater காமெடி மறக்க முடியாத ஒன்று.. "I am Back"... D70 to Ambattur Estate'ல ஒரு Interview Only Referral, அங்க வந்த ஒரு அச்சொசியாடே பரிந்துரை பண்ண சொன்னேன், அந்த புண்ணியவான் பரிந்துரை பண்ணான்..அதுக்குள்ள Enrolling முடிந்தது. கிண்டி Alexander sq ஒரு Interview நடக்குது அங்க போனு சொன்னார். உடனே கிண்டி பஸ்ல போய் அங்க Interview அட்டெண்ட் பண்ணி கடைசி ரவுண்டு போன்ன அங்கையும் Referral... கோவிந்தா. மறுநாள் வீட்டு Owner கண் கலங்கி அன்னைக்கு தான் பார்த்தோம்..அந்த அளவுக்கு சுத்தமா வெச்சிருந்தோம். என்னைக்கு Bachelor ஒரு வருஷத்துக்கு மேல ஒரே வீட்டுல இருந்து பார்த்து இருக்கீங்க..இதுக்கு மேல அவர கஷ்ட படுத்த கூடாதுனு வீட்டை காலி பண்ணிட்டு நண்பனின் மடிப்பாக்கம் வீட்டுக்கு சென்றோம்.
வேலையே இல்லாம வெட்டியா இருந்தாலும் எதிர் வீட்டு பாட்டி, வீடு ஒன்னு வெலைக்கு வந்திருக்கு லோன் போட்டு வாங்கிரியனு கேட்டாங்க.. 2010ல அதே வீடு மூன்று மடங்கு விலையில். மடிப்பாக்கம் சென்னைக்கு வெளியில மழை பெய்தாலே இங்க தண்ணி நிக்கும். November 2005, செம மழை, வடபழனிக்கு ஒரு Interview போன்னோம், interview cancelled..ரூம்க்கு கேளம்புலம்னு இருக்கும் பொது, நண்பன் தீடிர்னு ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டான், CASH இல்லைன்னு போன ATM வொர்க் வொர்க் ஆகல, இன்னொரு ATM'ல எடுக்கலாம்னு போன அதுவும் வொர்க் ஆகல... அய்யயோ .. புல்லா நெனஞ்சிடு இன்னொரு ATM நோ லக்.Purse'ல 5 RS, ஷேர் ஆட்டோ 10 Rs கேட்டான், D70 -Velachery 5 RS ticket போய்டுச்சி, Velachery ATM'ல எடுத்துக்கலாம் நெனச்சேன்,..மழை மட்டும் இல்ல நேரமும் சுத்தி சுத்தி அடிச்சிடு...அங்கயும் வொர்க் ஆகல.டிக்கெட் எடுக்காம பஸ் ஏறலாம்னு வெயிட் பண்ணேன். Route 51K ஏறுனா கண்டக்டர் டிரைவர் தவிர யாரும் இல்லை...என் கூடஒரு ரெண்டு பேர் ஏறுனாங்க. கண்டக்டர் டிக்கெட் டிக்கட்னு கேட்டுகிட்டே வந்தாரு... தம்பி டிக்கெட் .. என்ன நெனச்சாரோ திரும்பி போய்ட்டாரு.. மடிபாக்கதுல இறங்குனா ஹோட்டல் இல்லை, ஹோட்டல் இருந்தாலும் காசு இல்ல.. ஆகக ஒப்டிஒன் Acct வெச்சிருந்த வீட்டு சாப்பாடு..அதுவும் நண்பன் கணக்கு தான்..அதுக்கு சுமார் 1 KM நடக்கணும் ..முட்டி கால் மேலுக்கு தண்ணி ...தண்ணியில் நடந்து அவ்வளவு தூரம் போய் சாப்டுட்டு.. நைட் சாப்பாடும் எடுத்துகிட்டு, அவங்கள்ட்ட கதை பேசிட்டு .. என்ன பேசுனோம்னு மறந்துடுச்சி ...
வடபழனில அருமையான வீடு எடுத்தோம் , சூப்பர் வீடு .. owner வீட்டு மேல.. சிகிரத்துல காலி பண்ண போறது உறுதி. பக்கதுல ஒரு PRODUCER வீடு கட்டுமான பணயில் இருக்குனு பேசிக்கிட்டு இருப்போம்...ஒரு நாள் நடிகர் Vijay வந்திருக்கார்னு ஒரு புரளி கெழப்பி விட்டான் ஒரு சண்டாளன் போய்ட்டான்.. மதியம் அங்கையும் இங்கையும் வெளிய்லையே சுத்திட்டு இருந்தது தான் மிச்சம் . நண்பன் Vijay'n பரம விசிறி சும்மா தேடி தேடி JAY JAY மாதவன் மாதுரி சுத்துனான்..மீண்டும் மாற்றம் தங்குமிடத்தில்.. அதே வடபழனில புதிய ரூம், இதோ போகுது பார் நரி , கோழி, காக்கா , சரணளையதுல இருக்க வேன்டியதலாம் இங்க இருங்குங்க தம்பிகளா அண்ணாச்சி வந்திருக்கேன் டா..அண்ணன் எவள்ளவு சம்பாரிபாறு, விடிய விடிய பேசிட்டு காலையில 4 மணிக்கு தூங்கிவிட்டு 11 மணிக்கு எழுந்து டி குடிக்க போகும் போது.. பாவம் பசங்க.. பக்கத்துக்கு வீட்டுகாரங்க குரல், நைட் ஷிபிட் வேலை முடித்து பசங்க தூங்கிட்டு இருக்கும் பொது இப்படி கரண்ட் கட் பண்ணிடங்கலே வருத்த பட்டங்க... சின்ன ரூம்ல 14 பேர் இருந்தோம், அமெரிகாவில் இருந்து நண்பன் வந்தப்ப ஒரு வாரம் முழுக்க என்ஜாய்மென்ட், வடபழனியின் டையாளங்களின் கமலா திரைஅரங்கம், AVM Rajeswari திரைஅரங்கம், வடபழனி முருகன் கோவில், SSR திரைஅரங்கம், பார்வதி மெஸ்,தேவி கருமாரி காம்ப்ளெக்ஸ்,சாலிக்ராமம் தட்ட மீன் ஹோட்டல்... வாரம் ஒரு முறை எங்களின் அடையாளங்கள் பதிவு செய்வோம்!.. ஆபீஸ் செல்ல இரண்டு வழிதடம், 17 M, 17E. 17 M - வெறும் ஆபீஸ் போறவங்க மட்டும் தான் இருபங்க, வள்ளுவர் கோட்டம் பாதி பேர் இறங்கிடுவாங்க, அடுத்தது பல்ம்க்ரோவே ஹோட்டல் பாதி பேர், நம்ம ஸ்டாப்பிங் LIC காலியா இருக்கும், அதே 17E ஏறுனா லயலோ கல்லூரி, எதிராஜ் கல்லுரி, காயிதே மில்லத் கல்லூரி- நம்ம ஸ்டோபிங்
தல படமோ, தலைவர் படமோ முதல் நாள் முதல் காட்சி என்றால் காசி திரைஅரங்கம், ரோகினி திரைஅரங்கம், உதயம் திரைஅரங்கம், இந்த திரைஅரங்கதில் தான் பார்க்க வேண்டும். சும்மா கை தட்டி, ஆட்டம் போட்டு, விசில் அடித்து ஒரே ரகளை பண்ணுவார்கள். அதே போல் சென்னையின் முக்கிய இடத்தை சுற்றி பார்க்கணும்னா 5E ரூட் ல போன்ன பார்த்துடுலாம். வடபழனியில ஆரமித்து அசோக் நகர் ,மேற்கு மாம்பழம், KK நகர் , நெசபாக்கம் அப்படியே போகும் பெசென்ட் நகர் வரைக்கும். சென்னைக்கு வருகிற யாருக்கும் பிடிக்காத ஒன்று கூவம், சென்னையை சுற்றி ஓடும், கூவத்த சுற்றி குடிசைகளும் அதை சுற்றி பல மாடி வீடுகளும் இருக்கும்.
மெரினா - திவுதிடல்
சென்னை என்று சொன்னுடன் அனைவர்க்கும் முதலில் மெரினா கடற்கரை பார்க்க வேண்டும் என்று ஒரு அசை இருக்கும். எங்களது மெரினா பயணம் வாரம் ஒரு முறை இருக்கும். போகின்ற வழியில் வரும் ஜெமினி மேம்பாலம், ஸ்டெல்லா மேரி கல்லூரி,.. மெரினா பல தரப்பட்ட மனிதர்களை பார்க்க முடியும், மாங்காய் , கார பொறி , மிளகாய் பஜ்ஜி , ஐஸ் .. சுட்ட சோளம் . மெரீனாவில் இருந்து திரும்பி வரும் பொது அப்படியே ராயபேட்டை ரொட்டி அண்ட் சிக்கன் தந்துரி வங்கிட்டு வருவோம்.அடுத்த பெசன்ட் நகர் கடற்கரை சும்மா ஹை டேக் பீச்.
ஒரு நாள் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றேன், பார்கிங்கும் ரயில் நிலையத்துக்கும் ஒரு விதமான சிமெண்ட் ஷீட் வைத்து அடைத்து இருந்தார்கள். ஒருவன் பேச்சை கேட்டு பார்கிங் பண்ணிட்டு பக்கத்தில் இருந்த ஷீட் ஓட்டையில் உள்ள புகுந்து ரயில் நிலையம் சென்றோம். இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துகொண்டு இருத்த ஒரு ஆபீசர் , பிளாட்போறம் செல்லும் முன் தடுத்தார். பிளாட்போறம் டிக்கெட் கேட்டார். உங்கள பார்த்த சந்தேகமா இருக்கு அந்த ஓட்டை வழியா வறீங்க.. அப்பறம் ஒரு அர மணி நேரமா பேசுனாலும் செலவு வெச்சிட்டான் கூட இருந்தவன்.
பயணங்கள் தொடரும்!!!
சென்னை என்று சொன்னுடன் அனைவர்க்கும் முதலில் மெரினா கடற்கரை பார்க்க வேண்டும் என்று ஒரு அசை இருக்கும். எங்களது மெரினா பயணம் வாரம் ஒரு முறை இருக்கும். போகின்ற வழியில் வரும் ஜெமினி மேம்பாலம், ஸ்டெல்லா மேரி கல்லூரி,.. மெரினா பல தரப்பட்ட மனிதர்களை பார்க்க முடியும், மாங்காய் , கார பொறி , மிளகாய் பஜ்ஜி , ஐஸ் .. சுட்ட சோளம் . மெரீனாவில் இருந்து திரும்பி வரும் பொது அப்படியே ராயபேட்டை ரொட்டி அண்ட் சிக்கன் தந்துரி வங்கிட்டு வருவோம்.அடுத்த பெசன்ட் நகர் கடற்கரை சும்மா ஹை டேக் பீச்.
ஒரு நாள் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றேன், பார்கிங்கும் ரயில் நிலையத்துக்கும் ஒரு விதமான சிமெண்ட் ஷீட் வைத்து அடைத்து இருந்தார்கள். ஒருவன் பேச்சை கேட்டு பார்கிங் பண்ணிட்டு பக்கத்தில் இருந்த ஷீட் ஓட்டையில் உள்ள புகுந்து ரயில் நிலையம் சென்றோம். இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துகொண்டு இருத்த ஒரு ஆபீசர் , பிளாட்போறம் செல்லும் முன் தடுத்தார். பிளாட்போறம் டிக்கெட் கேட்டார். உங்கள பார்த்த சந்தேகமா இருக்கு அந்த ஓட்டை வழியா வறீங்க.. அப்பறம் ஒரு அர மணி நேரமா பேசுனாலும் செலவு வெச்சிட்டான் கூட இருந்தவன்.
நண்பன் தனது chat தோழிய பார்க்க Spencer போய்டு பலப் வாங்கிட்டு அதை எங்கள்ட்ட சொல்லாமா மறைக்க முயற்சி செய்து சிறிது நேரத்தில் ரூம் முழுவதும் ஒரே சிரிபொலிதன். ஒரு முறை நண்பனை நந்தனம் அழைத்து செல்கிறேன் என்று தி.நகர் வரைக்கும்அழைத்து போய் அங்க இருந்து வழி தெரியாமல் அவனிடம் திட்டு வாங்கிகொண்டு பல்பு வாங்குனது,
அடுத்தது வடபழனியில் இருந்து விமானநிலையம் செல்லும் வழியில் கத்திபாரா மேம்பாலம் அருகே குழம்பி எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டு பல்பு வாங்கினது. அடுத்தது புதிய வீடு எடுத்தது அண்ணா நகர் கிழக்கு, அந்த பகுதிக்கு அன்று வரை சென்றதில்லை, ஈசி ஆனா இடத்துகே வழி தெரியில, இதுல எனக்கு வந்த சோதனை.. ஒரு முக்கிய காரியமாக உடனடியாக ஆபீஸ் போக வேண்டியதுகிவிட்டது.விடிய்காளையில் ஒரு 5 மணிக்கு அண்ணா நகர்ல இறங்க வேண்டிய இடம் தெரியாமல் ஒரு மணி நேரமா சுத்தி சுத்தி வந்தேன்.
பயணங்கள் தொடரும்!!!
எழுத்துநடையும், தமிழ் பிழையும் மெதுவாக திருத்திகொள்கிறேன்.
நன்றி
சிவா