Wednesday, February 25, 2015

டெல்லி தேர்தல்

குட்டிக்கதை 
ஒரு வறட்சி மிகுந்த காட்டில், ஒரு சிங்கத்தின் வீடு மட்டும் செல்வசெழிபோடு இருந்ததை பார்த்த மற்ற உயிர் இனங்கள் சிங்கத்திடம் கேட்க, அதற்கு நீங்கள் அனைவரும் என்னை இந்த காட்டிற்கு ராஜா ஆக்கினால், நீங்களும் இதே போல் இருக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டியது  . சிங்கமும் ராஜாவாகியது, சில காலம் கடந்து, தனது நெருங்கிய கூட்டாளியான புலியை அழைத்து வந்து மற்ற காடுகளையும் வசபடுத்தி கொண்டு வா என்றது. புலியும், சிங்கத்தின் பழைய செல்வசெழிப்பு கதையை சொல்லியும் , அலை அலை என்று மாயைகாட்டியும் சில காடுகளை கவர்ந்து சிங்கத்தின் வசம் கொடுத்தது. ஆனால் ஆதரவு தெரிவித்த அணைத்து ஜீவராசிகளும் இன்னும் வரச்சியிலே இருந்தார்கள். எதிர்பார்த்ததை எதையும் செய்யாமல் "நீ போகும் இடம் எல்லாம் வெற்றித்தான்", "உன் அலையே சிறப்பு" என்று சிங்கமும் புலியும் தங்களை தானே பாராட்டி கொண்டுஇருந்தது. மத்தியில் இருக்கும் ஒரு காட்டை பிடிக்க சிங்கமும் புலியும் அங்கே ஒரே கூட்டத்தில் இருந்த இரு நரிகளில் ஒரு நரியை ராஜாவாக்க நினைத்தது, மத்திய காடுகளில் இருந்த உயிரினங்கள் இன்னொரு நரிக்கு ஒட்டுமொத்தமாக ஆதரவு தெரிவித்து சிங்கத்தின் பிடரியை பிடித்து இழுத்து வெளியே தள்ளியது. எனது அலை எங்கே,எனது வெற்றிபயணம் எங்கே, ராஜாவாகி எட்டு மாதங்களாக எதுவும்  செய்யவில்லையே, இந்த தோல்வி தொடர்க்கதை ஆகிவிடபோகிறது என்று சிங்கமும் புலியும் பேசிகொல்லாமல் யோசித்து கொண்டே தங்களது காட்டிற்கு செல்கிறது.