கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்!!!
நான் எழுதியதோ சில பதிவுகள் தான், அதில் முதன்மை பெரும் உங்களை பற்றி எழுதிய இப்பதிவு!!!. சென்று வாருங்கள் அய்யா!. உங்களால் தலைநிமிர்தது இந்தியாவும் தமிழகமும்!!!
என் கதை என்னோடு முடிந்துவிடும்.
உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை.
நான் எதையும் சம்பாதிக்கவில்லை.
எதையும் கட்டிவைக்கவில்லை,
என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை.
என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்
- அப்துல் கலாம்(அக்னிச் சிறகுகள்)
இந்தியாவின் கருப்புநாள் இன்று!! எங்கே சென்றாய் எங்களை விட்டு!! கனவு காண சொன்னாய் இன்று கனவாகி போனாய்! இனியும் உன்னை போல் ஒருவரை பார்ப்பதும் கனவே!!!. நின்றது உன் இதயம் இன்று, என்றும் புழுங்கி, அழுது உன் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கும் நெஞ்சங்கள் நின்று. நீங்கள இல்லாத இந்தியா என்றும் வெற்றுடமைதான்..அன்று தூரத்தில் உங்களை பார்த்தேன் இன்றோ பார்க்காத தூரத்துக்கு சென்றுவிட்டாயே முதற்குடிமகனே.. தமிழ்நாட்டின் சிகரமே! அறிவியலின் தலைமகனே! தவிக்கிறாள் தமிழன்னை உன் பிரிவால்!!!. அழுகிறது அணைத்து நெஞ்சகளும் உன் இறப்பால். நயவஞ்சகன் ஆகிவிட்டான் கடவுள் இன்று உன்னை அழைத்துக்கொண்டு, அவனை சொல்லியும் குற்றமில்லை, உன்னை பற்றி தெரிந்திருப்பான், உன்னை வின் உலகத்துக்கு அரசாள அழைத்துகொண்டான்.
பொக்க்ரைன் வெய்து வல்லரசு நாடுகளை அலறவைதாய், இந்தியாவில் தயாரித்த ஏவுகணையை வெற்றிகரமாய் செலுத்தியபோது உலகமே இந்தியாவை பார்த்து வியந்தது உன்னால், உன் நுண்மதியால். உன்னால் பெருமைபட்டது பாரதரத்னாவும், பத்ம விருதுகளும்!. டாக்டர் பட்டம் கொடுக்க கல்லூரிகள் அலைமோதியது, 40 கல்லூரிகளின் டாக்டர் பட்டம் உன் தலையினில் மகுடம் சூட்டினாலும், தலைகனம் இல்லாத தமிழகத்தின் தலைமகன் நீ, இந்தியாவின் முதல்மகன் நீ!!!. இது தான் வாழ்கை என்று ஏற்றுக்கொண்டு என்னைப்போல் இருப்பவர்கள் மத்தியில் இதுவல்லவா வாழ்க்கை என்று அடிகோடிட்டு சென்றுவிட்டாய்!!! கண்ணீர் பார்த்திராத என் கண்களுக்கும் கண்ணீரை காட்டிவிட்டு அக்னி சிறகடித்து பறந்துவிட்டாய்..
இதுவரை பன்னிரண்டு பேரை ஜனாதிபதிக வெய்து அழகு பார்த்தது இந்திய அனால் அந்த ஜனாதிபதி பதவியை அழகுபடுத்தியது நீ ஒருவனே!! படிக்கும்போது ஏதனும் தலைவர்கள் இறந்து போனால் சந்தோஷமாக இருக்கும் விடுமுறை கிடைக்கும் என்று, இன்று தான் முதல் முறையாக ஒரு தலைவர் இறப்புக்கு கலங்கியது கண்களும்! நெஞ்சமும்!!! ஏவுகணை, அணுகுண்டு என்று சொன்னாலே இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நியாபகம் வருபது உங்கள் பெயரும் முகமும் தான்..ஏனோ நீங்கள் எங்களுடன் அப்படி கலந்துவிட்டீர்கள்!.
மனதில் தோன்றியதை விதையாக விதைத்து பல இளைஞர்களை உருவெடுக்க செய்தாய்..குழந்தையுடன் குழந்தையாய், மாணவர்களுடன் மாணவனாய், விஞ்ஞானிகளுடன் விஞ்ஞானியை! அரசியல்வாதிகளுடன் முதற்குடிமகனாய், மக்களுடன் மக்களாய் வாழந்த மக்களின் ஜனாதிபதி இப்பொழுது இல்லை!!!உங்கள் காலங்களில் நானும் வாழ்தேன் என்ற பெருமையே போதும்.. சென்று வாருங்கள் அய்யா!!! நீங்கள் காட்டிய திசையில் பயணிக்கிறோம்!!!
-சிதம்பரம் சிவா