Friday, June 22, 2018

புராதன கதைகள்- 1 - உயர்ந்த நட்பின் இலக்கணம்



முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்; இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்; முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும் 


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. அவற்றில் மிகசிறந்த ஒன்று பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்து நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தது. நிகழ்காலத்திலும் இவர்களை போல் வாழும் அணைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.

                                                                                                                                                                           நன்றி 

சிதம்பரம்  ஜெ .சிவா 

                                                உயர்ந்த நட்பின் இலக்கணம் 

சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது. நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர். 

முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?.

இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.

முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள். தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.

எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.

இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர். ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.

நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.

இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள். அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர். இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார்.

என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன் என்று போருக்கு எழுந்தார்.

சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.
முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார்.  

அவர் என்ன சொன்னார்.?

                      "எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
                        நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
                        அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
                        இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே"
(புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது).

அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்?  உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே.
அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்?
இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா?  
போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும்.

நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.

முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?

கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை.என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியுடன் சொன்னார்.\

ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?

ஆம் அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்

முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?

பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர். வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள்.அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.

முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே

இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார்.

அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர்.

செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்

முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.

இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன் என்று புறப்பட்டார் முத்தனார்


வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள்.
அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர். திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர்.

அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று என்றார் பொத்தியார்.

பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்.

அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர்.

அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம் என்றார் பொத்தியார்.

புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள் என்றார் அரசர்.

இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.

அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை.பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே என்று கேட்டார் பொத்தியார்.

நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.

அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள். உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே" என்று கேட்டார் பொத்தியார்.

பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?

அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.

பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும். அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது. இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?

பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.

அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே. 

மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன். உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?

அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.

பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே.
திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது. வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும். மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.

அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும். 

மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.

அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன்.  என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.

பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.

அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும். அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன் என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார். 

கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர். சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர்.

மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொத்தியார்அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார். 

கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே என்று கலங்கினார். ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே! கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்?
இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே. காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்" என்று புலம்பினார் அவர்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர், புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம். இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம். நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம் என்றார்.

பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன். நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம் என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார். 

மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார். அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர். வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர். மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம் என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார்.

பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும் என்றார் பொத்தியார்.

ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.

ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் "காய்நெல் அறுத்து" என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே. நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?

பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்."

புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். 

நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார். என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.

கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம். 

பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்

என் அருகில் உள்ள இந்த இடம்தான்

பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார். அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.

பொத்தியார் தயக்கத்துடன் பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?" என்று கேட்டார்

எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்

நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை. உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.

பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு.
நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல என்றார் பிசிராந்தையார்.

புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.

பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?

                               "இசை மரபாக நட்புக் கந்தாக
                                 இனையதோர் காலை யீங்கு வருதல்
                                 வருவ னென்ற கோனது பெருமையும்
                                 அதுபழு தின்றி வந்தவ னறிவும்
                                 வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே"
                             (புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)

என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார்.
அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.

பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது? 

என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன். நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உயிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார்.
காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயலவில்லை.
என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல் என்றார் பிசிராந்தையார்.

பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் பொத்தியார்.


***** முற்றும் *****

Monday, March 5, 2018

சென்னை வரவேற்கிறது!!!



முன்னுரை

வணக்கம், மீண்டும் உங்கள் பார்வைக்காக ஒரு கதை எழுத ஆயுத்தம் ஆனேன், ஆனால் எந்த விதமாக இருக்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கையில்,சமிபகால விமானவிபத்துக்களை கதை கருவாக்கி அதில் பயணம் செய்தவர்களின் மனநிலையில் ஒரு சிறு கதை. ஒவ்வொரு பயணத்திலும் பல மறக்கமுடியாத சம்பவங்களும் சில தவிர்க்க முடியாத விபத்துக்களும் ஏற்படும். ஒரு பயணியின் சிறுபிள்ளை தனமான பயமும், விதி அதை நிஜம் ஆகிறதா இல்லையா என்பதே இக்கதை, இவர்களுடன் வெகுகாலம் கழித்து சந்தித்துக்கொண்ட சந்தோஷும் நய்யாண்டி மிதுனும்  பயணிக்கிறார்கள், நாமும் அவர்களுடனும் சகபயணிகளாக சேர்ந்து பயணிப்போம்.


இக்கதையில் வரும் சம்பவங்களும்,பெயர்களும், கதாபாத்திரங்களும் அனைத்தும் கற்பனையே, யார் மனதையும், புண்படுத்துவோ, குறிப்பதோ அல்ல, மீறியும் உங்கள் மனதில் சந்தேகம் எழுமானால் அதற்கு யாரும்பொருபல்ல.
                                                          தமிழ் வாழ்க!!!


புகை, மது உடல்நலத்துக்கு கேடு. இக்கதையின் தேவை கருதி இடம்பெற்று இருக்கிறது.

நன்றி 

சிதம்பரம்  ஜெ .சிவா 

சென்னை வரவேற்கிறது!!!


சந்தோஷ் தனது அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு சிக்காகோ விமானநிலையத்தில் நீண்ட வருசையில் நின்றுக்கொண்டு இருந்தான். அவனுக்கு ஐந்து பேருக்கு முன்னால் ஒருவள் மிகவும் பதற்றமுடன் நின்று கொண்டு, அடி கடி திரும்பி பார்த்துகொண்டு இருந்தால்.
சந்தோஷ் சற்று கூருந்து கவணிக்க, சந்தோஷ் ஏதோ தன்னை தான் பார்க்கிறாள் என்று அவளை பார்த்து புன்னைகைக்க எதிர் திசையில் எந்த சலனமும் இல்லை. அவள் முகத்தில் ஒரு விதமான பயம் தெரிந்தது, பார்க்க நம்ம ஊர் பெண் போல் தெரிகிறாள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், போய் என்ன என்று கேட்கலாமா என்று யோசித்த சந்தோஷ், வேண்டாம் நமக்கு
எதுக்கு வம்பு என்று தமிழனனின் உண்மை நிலையை நிரூபித்தான். ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று தனக்குள்ளே வெறுத்து கொண்டு, இதே இந்நேரம் மிதுன் இருந்து இருந்தால் அனைத்தும் விசாரித்து சொல்லிருப்பான். அவனை பார்த்தும் பல காலங்கள் ஆகிறது என்று சலித்து கொண்டான் சந்தோஷ். ஆங்கிலத்தில் அறிவுப்பு கேட்கிறது "Flight to London BA021 is delayed for 2 hrs, passengers please wait on Airport lounge". விமானத்தில் ஏதோ சிறு கோளாறு என்று முனுமுனுத்து கொண்டு அனைவரும் சென்று கொண்டு இருந்தார்கள். சந்தோஷ்யின் கண்கள் அவளை தேட, அவள் முன்னே நின்ற இடத்தில் இப்போது இல்லை. சந்தோஷ் தங்கும் அறையை நோக்கி விரைகிறான். அவள் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுதுக்கொண்டு இருந்தால். அவள் அருகில் சந்தோஷ் செல்ல முயற்சிக்க, அவள் சட்யென்று எழுந்து வேகமாக நடக்க அவளை பின்தொடர்த்து சந்தோஷ் செல்கிறான். அவளும் திரும்பி பார்த்து கொண்டே வெவ்வேறு Boarding Gate கடந்து சென்று கொண்டு இருந்தால். சந்தோஷ் ஒரு இடத்தில் நின்றுவிட்டு ஏன் இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு திரும்பி தனது இடத்துக்கு செல்கிறான்.
                       
                             விமானம் புறப்பட தயார் என்று அறிவிப்பு கேட்க, பயணிகள் அனைவரும் வருசையில் நிற்க ஆரம்பித்தார்கள், சந்தோஷ் முன்கூட்டியே வந்ததால் முதலில் நின்றான். நிமிடதற்கு இரண்டு முறை திரும்பி அவளை இரண்டு விழிகள் தேடி கொண்டு இருந்தது. அனைவரும் விமானத்தின் தங்களது இருக்கையில் அமர்ந்தார்கள். தன்னால் தான் அவள் வரவில்லை என்று நொந்து கொண்டான் சந்தோஷ். வெளியே அறிவிப்பு ஒலிகிறது "Final Call for Dhiya". சந்தோஷ் வெளியே பார்த்துக்கொண்டு இருக்க, தியா உள்ளே வருகிறாள். விமானத்தில் இருபவர்களின் விழிகள் அணைத்தும் அவளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தியாவுக்கு விமான சிப்பந்திகள் உதவ அவள் சந்தோஷ்க்கு இரண்டு இருக்கைக்கு வலது திசையில்
அமர்கிறாள். அனைவருக்கும் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க, தியா திரும்பி பார்க்கிறாள், சட்யென்று சந்தோஷ் தென்பட திரும்பி கொண்டால். விமானியின் குரல் ஒலிக்க விமானம் புறப்பட தயார் ஆனது. சிக்னலில் நிற்கும் வண்டிகள் போல ஒவ்வொன்றாய் புறப்பட அவற்றை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இருவரை தவிர. விமானம் மேல உயர அனைவரும் வாடிக்கையான நடவடிக்கையில் ஈடுப்பட துவங்கினார்கள். சந்தோஷும் வழக்கம் போல திரைப்படம் பார்த்துக்கொண்டே இருக்கையின் இடைவெளியில் அவளை பார்த்தான். அவள் உறங்கிக்கொண்டு இருந்தால். சிப்பந்திகள் உணவு பரிமாற அனைவரும் சாப்பிட்டுவிட்டு கண் அமர்ந்தார்கள். மிண்டும் அவளை பார்க்க தியா அங்கு இல்லை. சுற்றியும் பார்க்கிறான் வெகு நேரம் ஆகியும் காணவில்லை. அவளை தேடி கொண்டு சென்றான். கடைசி இருக்கையில் ஜென்னல் ஓரம் சாய்ந்துகொண்டு இருந்தால். அருகில் அமர்ந்தான், உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க, என்னால் முடிந்தால் உதவுகிறேன் என்று சொன்னான். கண்களை துடைத்து கொண்டு, ஒன்றும் இல்லை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னால் தியா. மீண்டும் தனது இருக்கைக்கு சென்று கண் அமர்தான். Heathrow ஏர்போர்ட் மிக அருகில் வர, அனைவரும் ஆயுத்தம் ஆனார்கள். அனைவரும் இறங்க சந்தோஷும் தியாவும் கும்பலோடு ஐக்கியம் ஆனார்கள்.
                                                           
                                                                   சந்தோஷ் சென்னை செல்லும் விமானத்தை நோக்கி செல்ல தியாவும் பின்தொடர்ந்தாள். Boarding Gate வந்து அடைந்தான். கூட்டதில் ஒரு குரல் "BOSS" என்று கேட்க, குரலின் திசையை நோக்கி திரும்பினான் சந்தோஷ். எதிரில் மிதுன். உங்களை நான் இங்கு பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. உங்களிடம் பேசி வெகு நாட்கள்
ஆகிறது, உங்கள் இருக்கை எண் சொல்லுங்கள் நான் எப்படியாவது என் இருக்கையை மாற்றி அங்கே வந்துவிடுகிறேன் என்று மூச்சி விடாமல் பேசிக்கொண்டு இருந்தான் மிதுன். சந்தோஷ் சிரித்துகொண்டே இருக்கை எண்னை  சொல்ல, எதிரில் இருந்த விமான நிலையம் ஊழியர்களிடம் மிதுன் பேசிக்கொண்டு இருந்தான். இவன் இருக்கை மாற்ற  தான் போனான் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்  இப்படி கடலை போடுறான் என்று நினைத்து கொண்டு மிதுனை அழைத்தான். பாஸ் கரெக்ட் பண்ணிட்டேன் உள்ளே போய் பார்த்துகொள்ளலாம் என்றான் மிதுன். விமானத்தின் அவரவர் இருக்கையில் அமர, ஒரு இரண்டு வருசைக்கு முன்னால் இருந்து சந்தோஷ் என்று குரல் கேட்கிறது. என்னடா வேணும் என்றான் சந்தோஷ். உங்கள் பக்கத்தில் யார் வந்தாலும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு iPAD முழுகினான் மிதுன். தியா உள்ளே வர சந்தோஷ் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு வருசையாக கடந்து வர, சந்தோஷுன் லப் தப் சத்தம் அதிகமாகியது. சந்தோஷின் இருக்கைக்கு மிக அருகில் வர, சட்யென்று நின்றால். இருவரின் விழிகளும் சந்தித்தது. முன்றாவது நபரின் குரல், ஹலோ மேடம் நீங்க என் இருக்கையில் அமர்ந்துகொள்கிறீர்களா , நாங்க  இருவரும்  நண்பர்கள், பார்த்து பேசி வெகுநாள் ஆகிறது, ப்ளீஸ் என்றான் மிதுன். சரி என்று தலை அசைத்து தியா மிதுனின் இருக்கைக்கு சென்றால். Thank you மேடம் என்று சொல்லிவிட்டு, சந்தோஷை பார்க்க, அவன் கோவத்தில் கொப்பலித்தான். பார்த்தீங்களா பாஸ் எப்படி நேக்க பேசி மாற்றினேன். இதுவும் நல்லதுக்குதான், நான் உன்னிடம் ஒன்று சொல்றேன், அந்த பெண் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் போல தோன்றுகிறது, என்னிடம் எதுவும் பேச மறுக்கிறாள். கண்டுபிடிச்சிட்டேன் பாஸ் அவள் ஒரு தீவிரவாதின்னு சந்தேகம் படுறீங்க, உங்கள் சிஷ்யனா சும்மாவா என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த விமான சிப்பந்தியை அழைத்தான். டேய் ஏன்டா, சும்மா இரு. அப்படிலாம் ஒன்னும் இல்லை. என்னனு விசாரித்து சொல்லு போதும். சிப்பந்தியிடம் சரக்கு கிடைக்குமா என்று கேட்க அவள் முறைத்து கொண்டே சென்றால்.
                               
                                       விமானியின் குரல் ஒலிக்க "welcome on board, travel time to chennai is about to 12 hrs, Ready to take off" விமானம் பறக்க தயாரானது. சில மணி நேரங்களுக்கு பிறகு சந்தோஷ் மிதுனிடம் என்னடா விசாரித்து சொல்கிறேன் என்று குடித்துக்கொண்டு இருக்கிறாய். பாஸ் அது ஒரு சப்ப விஷயம் எனக்கு ஒரு கட்டிங் வாங்கிகொடுங்க என்றான். சென்னை போக இன்னும் நான்கு மணி நேரம் இருக்கும் தருவாயில், கண்விழித்து பார்த்தான் சந்தோஷ், அருகில் மிதுன் இல்லை, தியா இருக்கும் இடத்தை பார்த்தான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். மிதுனை அழைக்க எழுந்து வந்தான். என்ன பாஸ் இப்படியா தூங்குவது. மிதுன் அவள் ஏன் பதற்றமா இருக்கிறாள், அதுவா பாஸ் சொன்ன சிரிப்பீங்க, சும்மா கதையை அலந்து விடுகிறாள் பாஸ். நீ அவள் சொன்ன கதையை சொல் என்றான் சந்தோஷ்.தியா மூன்று வருடங்கள் கழித்து சென்னை செல்கிறாள். அவளுக்கு ஏதோ கனவு வந்ததாம் விமானம் வெடித்து சிதர்வதுபோல், இதே போல் இரண்டு முறை கனவில் வந்ததுப்போல் நடந்துதாகவும் சொல்கிறாள். அது சரி, அதற்கு ஏன் என்னை பார்த்து பயப்படனும், அது இதை விட காமெடி பாஸ்.அந்த கனவில், உங்களை போல் தோற்றம் உள்ளவரை பார்த்ததாகவும், உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அந்த விபத்து நடந்ததாகவும் சொல்கிறாள். அதனால் முனஎச்சரிக்கையாக உங்களை பார்பதையே தவிர்க்கிறாள். அத விடுங்க தலைவா, ஏன் இந்த நாங்கு வருடமாக நீங்கள் சரியாக கதைகள் எழுதுவது இல்லை, நான் உங்களை விட்டு சென்று விட்டேன் என்று வருத்தமா என்று சொல்லி உரக்க சிரித்தான்.சக பயணிகள் முறைக்க அமைதியானான் மிதுன். சிரிச்சது ஒரு குற்றம்போல் பார்கிறாங்க , இருங்கையா இன்னும் கொஞ்சம் நேரத்தில் விமானம் தலைகுப்ற விழபோகுது அப்ப குய்யோ முய்யோ கத்துவீங்க பார்த்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் எதிரில் இருந்த தியா திரும்பி பார்த்து அழுதாள். இதுவேறையா என்று சலித்துக்கொண்டான்.
                                        
                                           மிதுனும் சந்தோஷும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள், சென்னை செல்ல இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கும் தருவாய்யில் சீட் பெல்ட் அலாரம் ஒலித்தது. அணைவரும் சீட் பெல்ட் அணிய விமான கேப்டன் எச்சரிக்கை ஒலிக்கிறது “வானிலை மிகமோசமாக இருப்பதினால் அணைவரும் அவர் அவர் இருக்கையில் அமரவும்”. பாஸ் இவங்க தமக்கே கப்சா விடுவாங்க அந்த கன்னாடியை திரையை திறங்கள் என்றான் சந்தோஷ். இருவருக்கும் ஒன்றும் புலப்படவில்லை. என்ன பாஸ் இவ்வளவு கருப்பா இருக்கு உங்க கலரே தேவாலம் போல என்று இருவரும்
சிரித்துக்கொண்டு இருந்தநேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர மின்னல் விமானத்தின் பக்கத்தில் ஒலித்து மறைந்தது. விமானம் நிலைதடுமாற ஆராமித்தது. சிறிது ஆட்டத்துக்கு பின் சகஜநிலைக்கு திரும்பியது. விமானியின் குறல் ஒலித்தது “ Dont get panic. Please be seated with seat belt. We will be landing in Chennai airport in another 30 mins. Thank you!”. விமானியின் பேச்சை கேட்க யாருக்கும் மணமில்லை அணைவரும்  பயத்தில் உறைந்து இருந்தார்கள். எல்லாம் முடிந்தது பாஸ், நல்லபடியா சென்னை போனா வடபழனி கோவிலில் போய் மொட்டை போடுறேன் ஆனா அது நடக்காதுப்போல என்றான் சந்தோஷ். சும்மாஇருடா நானே பயத்தில் இருக்கேன். இதனிடையில் விமானி அவசரகால உதவி என்னை அழைத்து பேசிகொண்டுஇருந்தார். சிறிதுநேரத்தில் விமானியின் குறல் “மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னையில் இருந்து பெங்களூர் திரும்புகிறது” என்று சொல்லிமுடிப்பதற்குள் இன்னொரு மின்னல் விமானத்தின் வலது பக்க இறகின்மீதுபட்டு  மறைந்தது.பயனிகள் அணைவரும் பயந்து கூச்சல்யிட்டார்கள். மிகவேகமாக அணைவரும் கன்னாடி திரையை திறந்துப்பார்த்து ஒன்றும் ஆகவில்லை என்று நிம்மதி முச்சிவிட்டார்கள். விமானம் பத்தாயிரம் அடி மேலேப்பறக்க உத்தரவுவர விமானி விமானத்தை மேலே எழுப்ப முகர்ச்சியில் இறங்கினார். பயனிகள் அணைவரும் விமானம் செங்குத்தாக போவதுப்போல் உணர்ந்தார்கள். ஒரு இருவது நொடிக்குள் மிண்டும் ஒரு பயங்கரமான மின்னல் விமானத்தின் வலது இறகின் மேல் இறங்கியது, செங்குத்தாக சென்ற விமானம் நேராகி குடிகாரர்கள் போல் ஆடியது. அந்த தள்ளாட்டத்திலும் சந்தோஷ்யின் மனம் தள்ளாடியது. சந்தோஷ் அவளை உற்று நோக்க அவளோ தன் கரங்களால் முகத்தைமூடி தேம்பி கொண்டு இருந்தால். மிதுன் இருவரையும்
பார்த்துவிட்டு இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ் இன்னும் எவ்வளவு நிமிடங்கள் நாம் உயிரோடு இருப்போம்னு தெரியல்ல இப்ப போய் சொல்லிக்கொண்டு இருக்கும்ப்போது அணைவரும் இடதுப்புறமாக திரும்ப அவளும் தன் கரங்களை விலக்கி திரும்ப அட்டைப்படத்தில் தெய்வத்தின் பின் இருக்கும் ஒலி வட்டம் போல தியாவின் பின்னால் தெரிந்தது. மெய்சிலிர்த்துக்கொண்டு இருந்த சந்தோஷ்க்கு பிறகுதான் தெரிந்தது முன்றாவது மின்னல் விமானத்தின் வலது இறகுனை பதம்பார்த்தது என்று. தீயின் பிலம்பு செந்நிறத்தில் உமில, விமானம் இயக்கப்படுவதோ ஒரேஒரு இன்ஜினில், பெங்களூர் திரும்பும் என்னமும், மேலே எமும் என்னமும் கைவிட இப்போது இருக்கும் ஒரேவழி சென்னையில் தரை இறங்குவது மட்டும்தான்.


                                    விமானி அவசரமாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க, பாதுகாப்பு காரணங்களைக்காட்டி சென்னையில் தரையிரங்க அனுமதி மறுக்கப்படுகிறது. அணைவரும் அவரவர் கடவுளை வேண்டிக்கொண்டனர். மிதுனும் கன்னைமுடி வேண்டிக்கொள்ள, சந்தோஷோ கண்திறந்து அவனுடைய கடவுளை பார்த்துக்கொண்டு இருந்தான். விமானம் இப்பொழுது வங்காள விரிகுடா கடலின் மேல் தள்ளாடிக்கொண்டு இருந்தது. அணைவரின் பராத்தனை வீண் போகவில்லை, சென்னையில் தரையிரங்க அனுமதி கிடைத்தது என்று விமானியின் அறிவிப்பு ஒலித்தது. இன்னும் அரைமணி நேரம் தான் விமானம் தாக்குபிடிக்ககும் பத்து நிமிடங்களில் தரையிரங்கிவிடலாம் என்ற என்னத்தில் விமானி அந்த அறிவிப்பை மறைத்தார். இரவு 9 மணி,சென்னை எப்போதும் போல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தான் மிதுன். மின்னல்யுடன்  
இப்போது புயல் காற்றும் சேர்ந்துக்கொண்டதால் தரையிரங்க 10 நிமிடம் இப்போது இருவது நிமிடங்கள் ஆகும். விமானத்தின் ஒரு இறகில் தி இருப்பதினால் விமானத்தை அடுத்தப்பத்து நிமிடங்களில் தரையிரக்க வேண்டும். விமானத்தின் பறக்கும் உயரம் படிபடியாக குறைய, புயல்காற்றின் வேகம் அதிகமாக,விமானத்தின் வலது திசையில் பயங்கர சத்தமும் அதனை தொடர்ந்து விமானத்தின் கன்னாடியில் விரிசல் விட, அவளோ பயத்தில் மிதுனை நோக்கிவர, மிதுனுக்கு கண்ணை திறப்பாதாயில்லை. கண்ணிர் ததும்ப சந்தோஷ்யிடம் இதற்கு தான் நான் உங்களிடம் பேசவில்லை என்று உறக்க அழுதால். உங்கள் பயம் உன்மையாகிவிட்டதே என்னு சந்தோஷ் நொந்துக்கொண்டான்.

                                                              இதனிடையில் தீ மெல்ல விமானத்தின் விமானத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக ஆட்க்கொண்டது. உள்ளே கூச்சல் பயனிகள்
அணைவரும் அங்கே இங்கே என்றி அலைந்துக்கொண்டு இருக்க, சந்தோஷும் மிதுனும் இருக்கையை விட்டு எழவில்லை, அவளும் அருகில் நின்றிந்தால். சென்னை விமானநிலையத்தில் ஒதுக்குப்புறமான ஓடுதளம் 24 யில் தரையிரங்க தயார் செய்யப்பட, அதே நேரத்தில் அவசரகால வாகனங்களும் தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுதளத்தை நோக்கி மெதுவாக ஆற்றில் விழுந்த இலைப்போல் வந்துக்கொண்டு இருந்தது. விமானியின் சாமர்த்தியத்தால் பின் சக்கரம் தரையில் பட, முன் சக்கரம் தரையில் முத்தமிட இருந்த தருவாயில், தீயில் எரிந்துக்கொண்டு இருந்த விமானத்தின் ஒரு பகுதி உடைந்து விமானத்தின் பின் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றதால் விமானம் மதம் பிடித்ததுப்போல் ஒடியது. விமானத்தின் பின் இறகு உடைய துவங்கின, அங்கேஇருந்த பல பொருள்கள் காற்றில்ப்பறக்க துவங்கின. விமானம் ஓடுதளத்தைவிட்டு அதே வேகத்தில் வேறு திசையை நோக்கி செல்கிறது. விமானநிலைய ஊழியர்கள் அணைவரும் சிதரி ஒடதுவங்க, உள்ளிருப்பரே ஒருவர் கை ஒருவர் பிடித்து நின்றார்கள். அதற்குள் காற்றின் வேகம் அதிகரிக்க விமானத்தின் பின் வரிசையில் இருந்த ஒரு நபர் காற்றில் உந்தபெற்று வெளியே விசப்படுகிறார். விமானத்தின் உள் இருப்பவர்கள் அலறல் சத்தம் இன்ஜினின் சத்தத்தைவிட அதிகமாக விண்ணை எட்டும் அளவுக்கு கேட்டது. அணைவரும் முந்திஅடித்து முன் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்க சந்தோஷயிடம் பேசிக்கொண்டு இருந்த தியா தடுமாறினாள். 

                                                             சந்தோஷ்யின் கைகள் அவள் கரங்களை பிடிக்கும் மின் கூட்டத்தின் ஒரு பகுதியினர் அவளை இடித்துதள்ளிவிட்டு போனார்கள், இதனால் நிலை தடுமாறி கிழே விழுந்தாள். கூட்டத்தினர் தடுத்துநிறுத்தி அவளை எழுப்ப சந்தோஷ் முயல் அதற்குள் தீ மெல்ல விமானத்தின் இருக்கையில் பரவியது . கரும்புகையால் முச்சயர்தது போன மிதுனை எழுப்பி முன்னே அழைத்து சென்றுவிட்டுவிட்டு, அவளை தேடுகிறான் சந்தோஷ் . நடுப்பகுதியில் எற்ப்பட்ட புகைமுட்டத்தில் இருந்த தியா சற்று எழுந்துநிற்க முயல, விமானித்தின் வேகம் சிறிது குறையத்தொடங்க மிதுன் நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள் விமானத்தின் முன் சக்கரம் உடைந்தது.
விமானத்தின் உள்ளே புகை மண்டலங்கள் சூழ அவளை மெல்ல புகை ஆட்கொண்டது. சந்தோஷ் அவளை தேடி துளாவ புகையை தவிர வேறு எதுவும் அகப்படவில்லை. இருவரும் விடாமல் தேடுகிறார்கள் மக்களோ அங்கும் இங்கும் அலைகிறார்கள், முன் சக்கரம் உடைந்து தீ பிழம்பை தெறிக்கவிட்டு சென்றுக்கொண்டு இருந்த விமானம் ஒரு கட்டத்தில் எதிரில் இருந்த மற்றொரு விமானத்தை இடித்துக்கொண்டு நின்றது. விமான சிப்பந்திகள் அவசரகால வெளியேற்றும் ஸ்லைடுகள் (Evacuation Slide) திறந்துவிட்டார்கள். அதில் ஒவ்வொரு பயணியாய் குதித்து தப்பித்து கொண்டுஇருந்தார்கள். உள்ளே எட்டி பார்த்து கொண்டே அருகில் இருந்தவர்களை அதில் இரக்க உதவி செய்து கொண்டுயிருந்தான் மிதுன், சந்தோஷையை காணவில்லை, தேடிக்கொண்டு உள்ளே சென்றான். புகையில் சந்தோஷ் தட்டுப்பட அவனை பிடித்து கொண்டு விமானத்தின் ஸ்லிட்டிங்கில் குதித்தார்கள் இருவரும்.


ஒரு வழியாக எல்லோரும் வெளியேற அவரசக்கால வாகனங்கள் விமானத்தை நோக்கி விரைந்தது. சந்தோஷ்வேதணையுடன்
விமானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். புகையும் நெருப்பும் பரபரப்பும் மெல்ல தனிகிறது, சந்தோஷின்பதட்டம் அதிகரிக்கிறது. அணைத்தும் அடங்கிப்போக முதலுதவி சிகிச்சை முடிந்து சந்தோஷும் மிதுனும் ஆம்புலன்ஸ் உதவியுடன் விமானநிலைய முகப்பை நோக்கி நகர்கிறார்கள். ஏனோ சந்தோஷ் இன்னும் அந்தஎறிந்த விமானத்தையே பார்த்து கொண்டுவந்தான். இவர்களுக்கு பெரியதாய் ஒன்றும் இல்லை என்றவுடன் சில நேரத்துக்கு பின் இவர்களுக்கு விமான நிலையத்தைவிட்டுவெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இருவரும் தானியங்கி படிகள் உதவியுடன் வரவேற்பு வாயிலை நோக்கிவந்து கொண்டு இருந்தார்கள். பாஸ் யார் செய்த புண்ணியமோ நமக்கு ஒன்றும் ஆகவில்லை, கொஞ்சம் அசந்து இருந்தால் இந்நேரம் காற்றில் பறந்து கடலில் விழுந்துதிருப்பேன், முன்னே சொன்னது போல் வடபழனி கோவிலில் கண்டிப்பா மொட்டை போடவேண்டும் என்று சகஜ நிலைகுத்திரும்பியது போல் பேசிக்கொண்டே வந்தான் மிதுன், இவ்வளவு பேசுறான் பதிலுக்கு ஏதாவது சொல்கிறாரா பார் என்று சந்தோஷையை பார்க்க அவனோ அதிர்ச்சியாய் நிற்கிறான். என்ன பாஸ் என்ற குரல் சந்தோஷின் காதில் எட்டவில்லை, சந்தோஷின் பார்வை மிதுன் பின்தொடர ஒரு பெண் மிகவும் பதற்றமாக நிற்கிறாள் கையில் வரவேற்ப்பு பதாகையுடன். இருவரும் அதிர்ச்சியாகி அவளை நோக்கி முன்னேற அவளோ கூட்டத்தின் உள்ளே சென்று மறைகிறாள். அணைத்து திசைகளிலும் தேடியும் அவள் அகப்படவில்லை, மிதுன் அந்த பதாகையை எடுத்து பார்த்தான் அதில் "Welcome Back " என்ற வாசகமும் திவ்யா என்று எழுதப்பட்டுஇருந்தது. ஒரு வேலை இங்கே பார்த்தது உண்மையா இல்லைஅங்கு நடந்தது உண்மையா என்று ஒன்றும் புரியாமல் இருவரும் விழித்துக்கொண்டு இருந்தார்கள். பல வருடத்துக்கு பிறகு நாம் சந்தித்தது இப்படி ஒரு அனுபவத்தை தரும் என்று நான் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. இந்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு இருக்கேன்னு முந்திக்கொண்டு சொன்னான் மிதுன், சந்தோஷோ சிகரட்டை பற்றவைத்து திரும்பி பார்த்துக்கொண்டே தானாக பேசிக்கொண்டே மிதுன் சொல்லுவதை கேட்காமல் நடக்க துவங்கினான்.

                                                       ***  முற்றும்  ***

  

Sunday, July 30, 2017

சோழர்கள் வரலாறு அத்தியாயம் 3 - சாளுக்கிய சோழர்கள்

சென்ற பதிவில் இடைக்காலச் சோழர்களை பற்றி தெரிந்துகொண்டோம். தொடர்ந்து பதிவுகள் போடமுடியவில்லை, இருந்தும் இடைப்பட்ட காலத்தில் பல தகவல்களை சேகரித்து சுவரசியமாய் படிக்கும் வகையில் தொகுத்து பதிவிட்டுள்ளேன். சிற்றரசர்களாக சரிந்து பின்பு பேரரசாக நிறுவிய சோழ மன்னர்கள் மீண்டும் கப்பம் கட்டும் சிற்றரசர்களாக மாறினார்கள். யார் ஆட்சியில் சிற்றரசர்களாய் மாறினார்கள் என்பதை இப்பதிவில் காணப்போகிறோம். வாருங்கள் சோழ பேரரசாக உயர்ந்த நம் சோழ கதாநாயகர்களை பற்றி தெரிந்துகொள்வோம்!!!


                                                          தமிழ் வாழ்க!!!


நன்றி 
-ஜெ . சிவா 

சோழர்கள் வரலாறு அத்தியாயம் 3   சாளுக்கிய சோழர்கள்


முன்பதிவு சுருக்கம்


விசயாலய சோழனில் தொடங்கி அதிராசேந்திர சோழன் வரையிலான அரசர்கள் மட்டுமே விசயாலய வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்களை  
இடைக்காலச் சோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.இவர்கள் காலக்கட்டத்தில்தான் சோழநாடு சோழசாம்ராஜ்ஜியமாக உருவெடுத்தது. இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க மன்னர்களாக கருதப்படுபவர்கள் 

1. விசயாலய சோழன் (848-871) - திருப்புறம்பயம் போர்(முந்தைய பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம்)
2. முதலாம் பராந்தக சோழன் -(907-950) - தலைநகர் - தஞ்சாவூர்
             மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் 
             சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் 
            தில்லைச் சிற்றம்பலத்துக்கு(சிதம்பரம் நடராஜர் ஆலயம்) பொன்              கூறை வேய்ந்தவன், எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்”  
என்று அழைக்கப்பட்டார்.
           வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு           ஆகியவற்றை அறிமுகம் செய்தவன்
3. சுந்தர சோழன் - (957-973) தலைநகர் - தஞ்சாவூர்
4. ஆதித்த கரிகாலன்:(957-969) தலைநகர் - காஞ்சிபுரம் 
           பிற பெயர்: பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன்
5.முதலாம் இராசராச சோழன்: (985-1014) தலைநகர் - தஞ்சாவூர்
           பிறந்தநாள் – 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம்.
           இயற்பெயர் "அருள்மொழிவர்மன்"
6. முதலாம் இராசேந்திர சோழன்: (1012-1044) 
         தலைநகர்: கங்கை கொண்ட சோழபுரம்
         சோழர்களின் பொற்காலம், தோல்விகளை பார்த்திராத மன்னன்

                                இதற்கு பின் வந்த மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனால் உருவாக்க பட்ட சாம்ராஜ்யத்தை காத்தார்கள். இடைக்கால சோழர்களின் கடைசி மன்னன் அதிராசேந்திர சோழன் பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது. வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது.

முதல் சாளுக்கிய சோழன்

குலோத்துங்க சோழன்

ஆட்சி புரிந்த காலம்: 1070-1120

இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசனை சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க
சோழன் ஆவான். முதலாம் குலோத்துங்க சோழன் அதிராசேந்திர சோழனின் மறைவுக்கு பிறகு சாளுக்கிய வம்சத்தில் இருந்து முதலாம் குலோத்துங்க சோழன் சோழ தேசத்தை ஆட்சி செய்ய தொடங்கினான். இவர், 1070-1120 ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி செய்து வந்தார்.இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன்காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது.ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக்கொண்டன. சேரநாட்டிலும், பாண்டிநாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கைவிட்டாலும், பாண்டிய, சேரநாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வடகலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர்படை கலிங்கம் வரைசென்று போராடி வெற்றிபெற்றது.கி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக்காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழநாட்டில் பெரும் அழிவுகளை உண்டாக்கினான். இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறியவருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத்துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன


விக்கிரம சோழன்

ஆட்சி புரிந்த காலம்: 1118-1136
முதலாம் குலோத்துங்க சோழனின் மகன்

இவர் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு 1118-1136 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தார். விக்கிரமசோழன் (1122-1135)
முதலாம் குலோத்துங்கனுக்கும் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூடப்பட்டான்.பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். விக்கிரமசோழன் தீவிர சிவபக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒருமாளிகையும் கட்டிக்கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான்



இரண்டாம் குலோத்துங்க சோழன்

ஆட்சி காலம் 1133-1150
விக்கிரம சோழனின் மகன் 

இரண்டாம் குலோத்துங்கனை தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரமசோழன் கி.பி.1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத்தேதிதான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரமசோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. 

ஒரு கல்வெட்டில், 'தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியினை அணிந்து கொண்ட அரசன்' என்று இம்மன்னன் புகழப்படுகிறான். 'இரண்டாம் குலோத்துங்கன்' தில்லையம்பலத்தில் முடிசூட்டிக்கொண்டான் என்று இது பொருள்படக்கூடும். அல்லது இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லை மாநகரம் புதுக்கியும் விரித்தும் அழகுபடுத்தப்பட்டது என்பதுவும் பொருளாக இருக்கலாம். தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான் குலோத்துங்கன். சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள்கோபுரத்தையும் பொன்மாமேரு போலப் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமாதேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும்படி சிவகாம கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழாநாளில் உலாவருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான். 


இவ்வாறு இவன் இத்திருப்பணிகளை எல்லாம் மிகவிரிவாக செய்யத்தொடங்கிய போது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு
போனதால் திருமுற்றத்தின் கண் இருந்ததிருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலை கடலில் கிடத்தும் படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கிகொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான். எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிருவம்ப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்திவிட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லை நாதன்மேல் கொண்டபற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முர்ப்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டுவந்த அந்தணர்கள் இடையுறுவிளைவித்தனர். இதனால் சினம்கொண்ட சோழன் பள்ளிக்கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பிவிட்டான் என தக்கையாப்பரணியில் கூததன் கூறுகின்றார் 
குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்த விதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரமசோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது. இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறியவருகிறது. கலைத்துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச்சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன


இரண்டாம் இராசராச சோழன்

ஆட்சி காலம் 1146-1163
இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் 

இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள்
பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவனுடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவனுக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்ததாக தெரிகிறது

இரண்டாம் இராஜராஜன் ஆட்சியில் பேரரசு எந்த அளவு, அல்லது எதுவரை பரவியிருந்தது என்பது அவன் கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கெந்தட்டியிலுள்ள அவனுடைய 7ம் ஆண்டுக் கல்வெட்டு குவலாள நாட்டில் சூற்றூரில் ஒருமலை மீது காடுவெட்டு என்ற சிற்றரசன் கோயில் கட்டிய விவரத்தையும், நிகரிலாச் சோழமண்டலத்தின் ஒரு பகுதியான கங்கநாட்டில் தகடூர் நாட்டைப்பற்றி சேலம் மாவட்டத்தில் கிடைத்த அழிந்து போகக்கூடிய ஓர் ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தகடூர்க்கிழவன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒருவன் கொடுத்த நன்கொடையைப் பற்றி கி.பி. 1164ல் பெரும்பேர் கொங்குநாட்டிலும் கங்கநாட்டின் கீழ்ப்பகுதியிலும் இன்னும் ஓரளவு சோழரின் மேலதிகாரம் தொடர்ந்து அங்கீகரிக்கப் பட்டுவந்தது என்பதைக் காட்டுகின்றது. 

சேரப் போர்

இரண்டாம் ராஜராஜ சோழனின்காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம்.சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசாராசா உலா கூறுகின்றது .இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான்நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரைவென்று ராசாராசனுக்கு வாகை சுட்டினான். 

பாண்டியப் போர்

                              சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம்தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான்நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம். காவிரிப்பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாகதான் இருக்கவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப்பிரச்சனிப்பற்றித் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். மேற்கு மழைத்தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக்காவிரி) சோழநாடு செழிக்கவிடாமல் இருக்கும் பொருட்டு அடைத்துவிடுகின்றனர். இதனை அடுத்து சோழன்படை எடுத்துசென்று பகைமை வென்று காவிரிதனை சோழநாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப்படுகின்றான். 

தன்தந்தையை போல் சிவப்பக்தனாகிய இரண்டாம் ராஜராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜராஜனைப்போல் அழியாப்புகழ் அடைய
விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப்பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் ராஜராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக்கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக்கோவில்களில் ராஜ ராஜெஸ்வரமும் ஒன்றாகும். தன்பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப்போல வேதனது புகழையும் சரித்திரத்தில் நிலைப்படுத்தும் பொருட்டு இந்தக் கலைக்கோவில்தனை கட்டினான். கலைகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்ததாக ஓட்டக்கூத்தார் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான். முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப் பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச்சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது. 

இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மையஅரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது. இரண்டாம் ராஜாதிராஜ சோழன் என்றப் பட்டப்பெயருடன் அரியணை ஏரியவன் அரசப்பீடத்தின் நேரடி வாரிசுகிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப்பெருமாள் என்பானுக்கு முடிசூட்டி விட்டு மரணம் அடைந்தான்.


இரண்டாம் இராசாதிராச சோழன்

ஆட்சி காலம் 1163-1178
விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரன்

இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சியின் இறுதியில்  நேரடியாக
ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத காரணத்தால் விக்கிரம சோழனின்மகள் வழிப் பேரனான இரண்டாம் இராசாதிராசன் பட்டத்திற்கு வரவேண்டும் என்று முடிவு செய்தான். இரண்டாம் இராசராசனுடன் சேர்ந்து, இரண்டாம் இராசாதிராசன் சிலவருடங்கள் அரசப்பிரதிநிதியாக ஆண்டு வந்தான். 

பாண்டியப் போர்

இரண்டாம் ராசாதிராசனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப்பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். 

தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக்கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப்பாண்டியன் முற்றுகை இட்டான்.
பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரமபாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும்படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப்படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீரபாண்டியனை ஆட்சிப்பொறுப்பில் எற்றுவித்தான்.

பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப்பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும்படை சேர்த்து வீரப்பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப்படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக்கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது. 

சோழர்களின் நுழைவு


அரியாசனத்தை இழந்த குலசேகரன் இரண்டாம் ராசாதிராசனின் உதவியை கோரி சோழனின் மாளிகையை அடைந்தான். தன்னிடம் புகலிடம் அடைந்த குலசேகரனுக்கு உதவி செய்யும் பொருட்டு பெருமானம் பிப்பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பிவைத்தான். தோண்டிப்பட்டணத்தில் சோழர்களுக்கும் சிங்களர்களுக்கும் முதல்போர் ஆரம்பித்தது. முதல்போரில் சிங்களப்படைகள் வெற்றியடைந்தன. இதனால் சோழமக்கள் அச்சம் கொண்டனர். அடுத்து நிகழ்ந்த போரில் திருச்சிற்றம் பல முடையான் பெருமானம் பிப்பல்லவராயன் சிங்களப்படைகளை வெற்றிக்கொண்டான். சிங்கள மாதண்டநாயகனையும், தண்டநாயகன் ஜகத்விஜயனையும் கொன்று சோழர்களின் புகழினை நாட்டினான். அத்துடன் அல்லாமல் சிங்களத்தலைவர்கள் இருவரின் தலைகளையும் அரண்மனை வாயிலில் மாட்டிவைத்தான். இதனை அடுத்து குலசேகரப்பாண்டியன் அரியணை ஏறினான்.

சிங்களப் போர்


சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரமபாகு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரமபாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில்
படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றறிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான். சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான். அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரமபாகு வினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டுமில்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரமபாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான்.இதனால் ராசாதிராசன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலைகளை அகற்றி அவர்களுக்கு கல்தூண் நாட்டினான். இதனை அறிந்த சோழன் குலசேகரன்பால் வெகுண்டெழுந்தான். தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக்கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இதனையடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம் பிப்பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். இவ்வாறு பெரும்படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றிநடைப்போட்டு பாண்டியதேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக்கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு ஈழமண்டலத்தின்
தென்கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கே ஓடினர். போரினில் தோற்ற குணசேகரப்பாண்டியனும் ஈழதேசத்தில் புகலிடமடைந்தான். இதனையடுத்து வீரப்பாண்டியனிற்கே பாண்டியதேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப்புரிந்து கப்பம் செலுத்தப்பணித்தான் சோழன். இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராசசோழன். 

சுருங்கிக்கொண்டிருந்த சோழர்களின் வரைப்படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான்
இரண்டாம் ராசாதிராசன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று சோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராசாதிராசன். ஆனால் கால ஓட்டத்தில் இரண்டாம் ராசராசனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர்தினவெடுத்தன. இராசாதிராசனின் போர்கலந்த சுற்றுசுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரசபீடம் கிடைக்காதா என்று ஏங்கினான். இதனை அறிந்த ராசாதிராசன் ராசராசனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரசபதவி அளித்துவிட்டு தெலுங்குதேசம் சென்றான்.


மூன்றாம் குலோத்துங்க சோழன்

ஆட்சி காலம் 1173-1218
இரண்டாம் இராசராச சோழனின் மகன்
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டுஆட்சி செய்தார்


இரண்டாம் இராஜராஜன் இறந்தபோது அவனுடைய பச்சிளம்பிள்ளைகளை
பல்லவராயர் பாதுகாத்து வந்தார். அந்த பச்சிளம்பாலகர்களுள் ஒருவராகக் குலோத்துங்கன் இருந்திருக்க முடியாது என்பதும் வரலாற்றின் படி அறியக்கூடியதாயிருக்கிறது. குலோத்துங்கன் என்பதுவும் இரண்டாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் குமாரகுலோத்துங்கன் என்பவனும் ஒருவனா என்ற குழப்பம் இருக்கிறது. ஒருவனே ஆயின் தன் முன்னவனைப்போல இவனும் சோழப்பேரரசர்களின் நேர் உரிமையாளன் அல்ல என்ற முடிவு ஏற்பட்டுவிடும். 

முதலாம் பாண்டியப் போர்


ராஜாதிராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீரபாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீரபாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப்படையை பாண்டியதேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமைதாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிபவீரன். எழகப்படை, மறவர்படை, ஈழப்படை ஆகியவை சோழனுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன்பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான். 

இரண்டாம் பாண்டியப் போர்

போரினால் துவண்ட வீரப்பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீரகேரளன்
உதவியை கோரினான். சேரப்படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப்பாண்டியன். தனது பாண்டியதேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர்நோக்கி தனது படையை நகர்த்தினான் வீரபாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப்பெரும்படைகளுக்கும் நடுவே மிகப்பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இந்தப் போரிலும் வீரபாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்கு பின் பாண்டியன் சேரதேசம் சென்று வீரகேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீரகேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பிவைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாளகொடுத்தான்.


ஈழப் போர்

சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர்.
அதுமட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டிவிட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப்படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பிவைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழதேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழதேசம் கவர்ந்தது. 

கொங்கு நாட்டுப் போர்

ஈழதேசத்தில் போர்புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர்புரிந்ததாக அறியப்படுகின்றது. ராஜாதிராஜன் காலத்தில் ஆட்சி புரிந்துவந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்து வதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களா கதங்களை அறிவித்துக்கொண்டனர். இதனால் வீறுக்கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப்பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்குதேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடுகொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேரமன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப்படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான். 

மூன்றாம் பாண்டியப் போர் 

விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகரபாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன்
குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழஅரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப்போர் நிகழ்ந்தது. குலசேகர பாண்டியன் தனது மரப்படையும் எழகப்படைதனையும் திரட்டிக்கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக்கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பலநாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கோட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின்வாங்கி தன்மக்களை காப்பாற்றிக்கொண்டு ஈழதேசத்தில் அடைக்கலம் புகுந்தான். இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழபாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக்கொண்டான்.

மூன்றாம் இராசராச சோழன்

ஆட்சி காலம் 1216-1256
மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகனாவார்.

மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் போசாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று.

பாண்டியனின் படை எழுச்சி

மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப்பட்டுக் கிடந்த தனது மக்களை வீறுகொண்டு எழுப்பித்தவன் சுந்தரபாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு
ஈடுக்கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராசராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதை அறிந்த சுந்தரபாண்டியன் விடுதலை வேட்கைகொண்டு வீறுகொண்டு எழவேண்டிய சமயம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர்களம் புகுந்தான் பாண்டியன். மூன்றாம் ராசராசச்சோழன் சோழர் குலத்தில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலின் நிழலில் இருந்த ராசராசச் சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிபுரிவதற்கு சற்றும் திறம்படைத்தவனாக இருக்கவில்லை. இதனால் தொன்றுதொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காகக் காத்திருந்த பாண்டியன், தக்கச்சமயத்தில் படைஎடுத்து வந்து சோழப்பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரைப்படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்லவைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடுகொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராசராசச்சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டு தஞ்சை வரை ஆட்சிபுரிந்தான் ராசராசச்சோழன். 

சுந்தரபாண்டியனுக்கு அடிப்பணிந்து ஆட்சிபுரிந்து வந்த ராசராசச்சோழன், போசளமன்னன் வீரநரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்துவிட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டியக் கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படுதோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க்கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப்பின்பு சோழனின் நிலையைபற்றி கத்தியகர்நாமிதம் என்னும்
நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்கபட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராசராச சோழனுக்கு அடி பணியாமல் ராசராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினான். சோழனை சிறைப்படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீரநரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச்சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப்பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப்பற்றினான். வீரநரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராசராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக்கொண்டான். 

ராசராச சோழனை மீட்ட பின்புக் காவேரிக்கரைவரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீரநரசிம்மன். காவேரிக்கரை வரை சோழர்களின் நிலப்பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச்சார்ந்தே இருந்தனர். தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராசராசச்சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது நாற்பதாம் வயதில் தனது மகன் மூன்றாம் ராசேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக்காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான்.


மூன்றாம் இராசேந்திர சோழன்

ஆட்சி காலம் 1246-1279
மூன்றாம் இராசேந்திர சோழன், மூன்றாம் இராசராச சோழனின் மகன்.

மூன்றாம் இராஜேந்திர சோழன் பட்டத்திற்கு உரியவனாக, கி.பி 1246ல் ஏற்றுக்கொள்ளப்பட்டான். அவன் மூன்றாம் இராஜராஜ சோழனைவிடவும் திறமைசாலி.
இராஜராஜனின் திறமையின்மையாலும் வடிகட்டிய முட்டாள்த்தனத்தாலும் சோழப்பேரரசு இழந்துவிட்ட பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது அவனது பட்டத்து உரிமை ஏற்பட்ட பின் 14 ஆண்டுகளுக்கு இராஜராஜன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத்திறமைமிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது.

மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வடஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழநாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

சோழஅரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக்காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக்கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம்.

இராஜேந்திரன் பாண்டியநாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழமன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே.
பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டுமுறை சோழநாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம்செய்து இராஜராஜனைச் சிறைவைத்ததற்கும் பாண்டியரே காரணம்.

எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்து விடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன்(பட்டம் 1238) இருக்கவேண்டும்.

தனது தந்தைக் காலத்தே சோழதேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும்படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழதேசத்தினை நிலை பெற செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டனின் பெயரினை தன்பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார்செய்து பாண்டியர்களுடன் போர்புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகரபாண்டியன் என்பவன் பாண்டியபடையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.

ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழதேசத்தினை வெற்றி பெறசெய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம்கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழதேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படைஎடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர்நாசம், படைநாசம், செல்வம் என பாண்டியர்களின் வசம் இருந்தவைகள் நாசம் ஆயின.



சோழர்களின் ஆட்சி பரம்பரை 



கி.மு 300'ல் தொடங்கிய சோழ ஆட்சி கி.பி 1279'ல் முடிவுற்றது. கி.பி 800'ல் தொடங்கி கி.பி 1218 வரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாய் தெற்கு ஆசியாவை ஆண்டார்கள். கிழக்கு இந்தியா, இலங்கை, பர்மா மற்ற சில நாட்டு மன்னர்களை கப்பம் கட்டவெய்த சோழர்கள் இறுதியில் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும்நிலை மிக கொடுமை.  ஒவ்வொரு மன்னனுக்கும் ஒரு சிறப்புண்டு அதனை திறம்பட கையாண்டு சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பினார்கள் இறுதியில் மீண்டும் பழைய நிலைக்கே வந்தாலும் அவர்களின் புகழும், பெருமையும், திறமையும், வீரமும்  இன்றளவும் போற்றிப்பாதுகாக்க படுகின்றன.

*****முற்றும்*****