Friday, June 22, 2018

புராதன கதைகள்- 1 - உயர்ந்த நட்பின் இலக்கணம்



முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்; இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்; முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும் 


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. அவற்றில் மிகசிறந்த ஒன்று பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்து நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தது. நிகழ்காலத்திலும் இவர்களை போல் வாழும் அணைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.

                                                                                                                                                                           நன்றி 

சிதம்பரம்  ஜெ .சிவா 

                                                உயர்ந்த நட்பின் இலக்கணம் 

சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது. நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர். 

முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?.

இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.

முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள். தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.

எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.

இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர். ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.

நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.

இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள். அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர். இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார்.

என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன் என்று போருக்கு எழுந்தார்.

சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.
முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார்.  

அவர் என்ன சொன்னார்.?

                      "எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
                        நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
                        அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
                        இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே"
(புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது).

அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்?  உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே.
அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்?
இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா?  
போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும்.

நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.

முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?

கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை.என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியுடன் சொன்னார்.\

ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?

ஆம் அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்

முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?

பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர். வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள்.அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.

முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே

இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார்.

அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர்.

செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்

முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.

இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன் என்று புறப்பட்டார் முத்தனார்


வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள்.
அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர். திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர்.

அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று என்றார் பொத்தியார்.

பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்.

அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர்.

அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம் என்றார் பொத்தியார்.

புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள் என்றார் அரசர்.

இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.

அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை.பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே என்று கேட்டார் பொத்தியார்.

நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.

அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள். உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே" என்று கேட்டார் பொத்தியார்.

பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?

அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.

பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும். அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது. இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?

பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.

அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே. 

மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன். உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?

அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.

பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே.
திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது. வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும். மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.

அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும். 

மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.

அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன்.  என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.

பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.

அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும். அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன் என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார். 

கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர். சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர்.

மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொத்தியார்அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார். 

கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே என்று கலங்கினார். ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே! கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்?
இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே. காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்" என்று புலம்பினார் அவர்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர், புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம். இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம். நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம் என்றார்.

பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன். நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம் என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார். 

மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார். அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர். வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர். மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம் என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார்.

பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும் என்றார் பொத்தியார்.

ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.

ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் "காய்நெல் அறுத்து" என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே. நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?

பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்."

புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். 

நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார். என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.

கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம். 

பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்

என் அருகில் உள்ள இந்த இடம்தான்

பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார். அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.

பொத்தியார் தயக்கத்துடன் பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?" என்று கேட்டார்

எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்

நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை. உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.

பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு.
நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல என்றார் பிசிராந்தையார்.

புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.

பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?

                               "இசை மரபாக நட்புக் கந்தாக
                                 இனையதோர் காலை யீங்கு வருதல்
                                 வருவ னென்ற கோனது பெருமையும்
                                 அதுபழு தின்றி வந்தவ னறிவும்
                                 வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே"
                             (புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)

என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார்.
அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.

பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது? 

என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன். நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உயிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார்.
காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயலவில்லை.
என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல் என்றார் பிசிராந்தையார்.

பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் பொத்தியார்.


***** முற்றும் *****

Monday, March 5, 2018

சென்னை வரவேற்கிறது!!!



முன்னுரை

வணக்கம், மீண்டும் உங்கள் பார்வைக்காக ஒரு கதை எழுத ஆயுத்தம் ஆனேன், ஆனால் எந்த விதமாக இருக்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கையில்,சமிபகால விமானவிபத்துக்களை கதை கருவாக்கி அதில் பயணம் செய்தவர்களின் மனநிலையில் ஒரு சிறு கதை. ஒவ்வொரு பயணத்திலும் பல மறக்கமுடியாத சம்பவங்களும் சில தவிர்க்க முடியாத விபத்துக்களும் ஏற்படும். ஒரு பயணியின் சிறுபிள்ளை தனமான பயமும், விதி அதை நிஜம் ஆகிறதா இல்லையா என்பதே இக்கதை, இவர்களுடன் வெகுகாலம் கழித்து சந்தித்துக்கொண்ட சந்தோஷும் நய்யாண்டி மிதுனும்  பயணிக்கிறார்கள், நாமும் அவர்களுடனும் சகபயணிகளாக சேர்ந்து பயணிப்போம்.


இக்கதையில் வரும் சம்பவங்களும்,பெயர்களும், கதாபாத்திரங்களும் அனைத்தும் கற்பனையே, யார் மனதையும், புண்படுத்துவோ, குறிப்பதோ அல்ல, மீறியும் உங்கள் மனதில் சந்தேகம் எழுமானால் அதற்கு யாரும்பொருபல்ல.
                                                          தமிழ் வாழ்க!!!


புகை, மது உடல்நலத்துக்கு கேடு. இக்கதையின் தேவை கருதி இடம்பெற்று இருக்கிறது.

நன்றி 

சிதம்பரம்  ஜெ .சிவா 

சென்னை வரவேற்கிறது!!!


சந்தோஷ் தனது அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு சிக்காகோ விமானநிலையத்தில் நீண்ட வருசையில் நின்றுக்கொண்டு இருந்தான். அவனுக்கு ஐந்து பேருக்கு முன்னால் ஒருவள் மிகவும் பதற்றமுடன் நின்று கொண்டு, அடி கடி திரும்பி பார்த்துகொண்டு இருந்தால்.
சந்தோஷ் சற்று கூருந்து கவணிக்க, சந்தோஷ் ஏதோ தன்னை தான் பார்க்கிறாள் என்று அவளை பார்த்து புன்னைகைக்க எதிர் திசையில் எந்த சலனமும் இல்லை. அவள் முகத்தில் ஒரு விதமான பயம் தெரிந்தது, பார்க்க நம்ம ஊர் பெண் போல் தெரிகிறாள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், போய் என்ன என்று கேட்கலாமா என்று யோசித்த சந்தோஷ், வேண்டாம் நமக்கு
எதுக்கு வம்பு என்று தமிழனனின் உண்மை நிலையை நிரூபித்தான். ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று தனக்குள்ளே வெறுத்து கொண்டு, இதே இந்நேரம் மிதுன் இருந்து இருந்தால் அனைத்தும் விசாரித்து சொல்லிருப்பான். அவனை பார்த்தும் பல காலங்கள் ஆகிறது என்று சலித்து கொண்டான் சந்தோஷ். ஆங்கிலத்தில் அறிவுப்பு கேட்கிறது "Flight to London BA021 is delayed for 2 hrs, passengers please wait on Airport lounge". விமானத்தில் ஏதோ சிறு கோளாறு என்று முனுமுனுத்து கொண்டு அனைவரும் சென்று கொண்டு இருந்தார்கள். சந்தோஷ்யின் கண்கள் அவளை தேட, அவள் முன்னே நின்ற இடத்தில் இப்போது இல்லை. சந்தோஷ் தங்கும் அறையை நோக்கி விரைகிறான். அவள் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுதுக்கொண்டு இருந்தால். அவள் அருகில் சந்தோஷ் செல்ல முயற்சிக்க, அவள் சட்யென்று எழுந்து வேகமாக நடக்க அவளை பின்தொடர்த்து சந்தோஷ் செல்கிறான். அவளும் திரும்பி பார்த்து கொண்டே வெவ்வேறு Boarding Gate கடந்து சென்று கொண்டு இருந்தால். சந்தோஷ் ஒரு இடத்தில் நின்றுவிட்டு ஏன் இவள் இப்படி பண்ணுகிறாள் என்று நினைத்து கொண்டு திரும்பி தனது இடத்துக்கு செல்கிறான்.
                       
                             விமானம் புறப்பட தயார் என்று அறிவிப்பு கேட்க, பயணிகள் அனைவரும் வருசையில் நிற்க ஆரம்பித்தார்கள், சந்தோஷ் முன்கூட்டியே வந்ததால் முதலில் நின்றான். நிமிடதற்கு இரண்டு முறை திரும்பி அவளை இரண்டு விழிகள் தேடி கொண்டு இருந்தது. அனைவரும் விமானத்தின் தங்களது இருக்கையில் அமர்ந்தார்கள். தன்னால் தான் அவள் வரவில்லை என்று நொந்து கொண்டான் சந்தோஷ். வெளியே அறிவிப்பு ஒலிகிறது "Final Call for Dhiya". சந்தோஷ் வெளியே பார்த்துக்கொண்டு இருக்க, தியா உள்ளே வருகிறாள். விமானத்தில் இருபவர்களின் விழிகள் அணைத்தும் அவளை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தியாவுக்கு விமான சிப்பந்திகள் உதவ அவள் சந்தோஷ்க்கு இரண்டு இருக்கைக்கு வலது திசையில்
அமர்கிறாள். அனைவருக்கும் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க, தியா திரும்பி பார்க்கிறாள், சட்யென்று சந்தோஷ் தென்பட திரும்பி கொண்டால். விமானியின் குரல் ஒலிக்க விமானம் புறப்பட தயார் ஆனது. சிக்னலில் நிற்கும் வண்டிகள் போல ஒவ்வொன்றாய் புறப்பட அவற்றை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இருவரை தவிர. விமானம் மேல உயர அனைவரும் வாடிக்கையான நடவடிக்கையில் ஈடுப்பட துவங்கினார்கள். சந்தோஷும் வழக்கம் போல திரைப்படம் பார்த்துக்கொண்டே இருக்கையின் இடைவெளியில் அவளை பார்த்தான். அவள் உறங்கிக்கொண்டு இருந்தால். சிப்பந்திகள் உணவு பரிமாற அனைவரும் சாப்பிட்டுவிட்டு கண் அமர்ந்தார்கள். மிண்டும் அவளை பார்க்க தியா அங்கு இல்லை. சுற்றியும் பார்க்கிறான் வெகு நேரம் ஆகியும் காணவில்லை. அவளை தேடி கொண்டு சென்றான். கடைசி இருக்கையில் ஜென்னல் ஓரம் சாய்ந்துகொண்டு இருந்தால். அருகில் அமர்ந்தான், உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க, என்னால் முடிந்தால் உதவுகிறேன் என்று சொன்னான். கண்களை துடைத்து கொண்டு, ஒன்றும் இல்லை நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னால் தியா. மீண்டும் தனது இருக்கைக்கு சென்று கண் அமர்தான். Heathrow ஏர்போர்ட் மிக அருகில் வர, அனைவரும் ஆயுத்தம் ஆனார்கள். அனைவரும் இறங்க சந்தோஷும் தியாவும் கும்பலோடு ஐக்கியம் ஆனார்கள்.
                                                           
                                                                   சந்தோஷ் சென்னை செல்லும் விமானத்தை நோக்கி செல்ல தியாவும் பின்தொடர்ந்தாள். Boarding Gate வந்து அடைந்தான். கூட்டதில் ஒரு குரல் "BOSS" என்று கேட்க, குரலின் திசையை நோக்கி திரும்பினான் சந்தோஷ். எதிரில் மிதுன். உங்களை நான் இங்கு பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. உங்களிடம் பேசி வெகு நாட்கள்
ஆகிறது, உங்கள் இருக்கை எண் சொல்லுங்கள் நான் எப்படியாவது என் இருக்கையை மாற்றி அங்கே வந்துவிடுகிறேன் என்று மூச்சி விடாமல் பேசிக்கொண்டு இருந்தான் மிதுன். சந்தோஷ் சிரித்துகொண்டே இருக்கை எண்னை  சொல்ல, எதிரில் இருந்த விமான நிலையம் ஊழியர்களிடம் மிதுன் பேசிக்கொண்டு இருந்தான். இவன் இருக்கை மாற்ற  தான் போனான் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்  இப்படி கடலை போடுறான் என்று நினைத்து கொண்டு மிதுனை அழைத்தான். பாஸ் கரெக்ட் பண்ணிட்டேன் உள்ளே போய் பார்த்துகொள்ளலாம் என்றான் மிதுன். விமானத்தின் அவரவர் இருக்கையில் அமர, ஒரு இரண்டு வருசைக்கு முன்னால் இருந்து சந்தோஷ் என்று குரல் கேட்கிறது. என்னடா வேணும் என்றான் சந்தோஷ். உங்கள் பக்கத்தில் யார் வந்தாலும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு iPAD முழுகினான் மிதுன். தியா உள்ளே வர சந்தோஷ் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு வருசையாக கடந்து வர, சந்தோஷுன் லப் தப் சத்தம் அதிகமாகியது. சந்தோஷின் இருக்கைக்கு மிக அருகில் வர, சட்யென்று நின்றால். இருவரின் விழிகளும் சந்தித்தது. முன்றாவது நபரின் குரல், ஹலோ மேடம் நீங்க என் இருக்கையில் அமர்ந்துகொள்கிறீர்களா , நாங்க  இருவரும்  நண்பர்கள், பார்த்து பேசி வெகுநாள் ஆகிறது, ப்ளீஸ் என்றான் மிதுன். சரி என்று தலை அசைத்து தியா மிதுனின் இருக்கைக்கு சென்றால். Thank you மேடம் என்று சொல்லிவிட்டு, சந்தோஷை பார்க்க, அவன் கோவத்தில் கொப்பலித்தான். பார்த்தீங்களா பாஸ் எப்படி நேக்க பேசி மாற்றினேன். இதுவும் நல்லதுக்குதான், நான் உன்னிடம் ஒன்று சொல்றேன், அந்த பெண் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் போல தோன்றுகிறது, என்னிடம் எதுவும் பேச மறுக்கிறாள். கண்டுபிடிச்சிட்டேன் பாஸ் அவள் ஒரு தீவிரவாதின்னு சந்தேகம் படுறீங்க, உங்கள் சிஷ்யனா சும்மாவா என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த விமான சிப்பந்தியை அழைத்தான். டேய் ஏன்டா, சும்மா இரு. அப்படிலாம் ஒன்னும் இல்லை. என்னனு விசாரித்து சொல்லு போதும். சிப்பந்தியிடம் சரக்கு கிடைக்குமா என்று கேட்க அவள் முறைத்து கொண்டே சென்றால்.
                               
                                       விமானியின் குரல் ஒலிக்க "welcome on board, travel time to chennai is about to 12 hrs, Ready to take off" விமானம் பறக்க தயாரானது. சில மணி நேரங்களுக்கு பிறகு சந்தோஷ் மிதுனிடம் என்னடா விசாரித்து சொல்கிறேன் என்று குடித்துக்கொண்டு இருக்கிறாய். பாஸ் அது ஒரு சப்ப விஷயம் எனக்கு ஒரு கட்டிங் வாங்கிகொடுங்க என்றான். சென்னை போக இன்னும் நான்கு மணி நேரம் இருக்கும் தருவாயில், கண்விழித்து பார்த்தான் சந்தோஷ், அருகில் மிதுன் இல்லை, தியா இருக்கும் இடத்தை பார்த்தான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். மிதுனை அழைக்க எழுந்து வந்தான். என்ன பாஸ் இப்படியா தூங்குவது. மிதுன் அவள் ஏன் பதற்றமா இருக்கிறாள், அதுவா பாஸ் சொன்ன சிரிப்பீங்க, சும்மா கதையை அலந்து விடுகிறாள் பாஸ். நீ அவள் சொன்ன கதையை சொல் என்றான் சந்தோஷ்.தியா மூன்று வருடங்கள் கழித்து சென்னை செல்கிறாள். அவளுக்கு ஏதோ கனவு வந்ததாம் விமானம் வெடித்து சிதர்வதுபோல், இதே போல் இரண்டு முறை கனவில் வந்ததுப்போல் நடந்துதாகவும் சொல்கிறாள். அது சரி, அதற்கு ஏன் என்னை பார்த்து பயப்படனும், அது இதை விட காமெடி பாஸ்.அந்த கனவில், உங்களை போல் தோற்றம் உள்ளவரை பார்த்ததாகவும், உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அந்த விபத்து நடந்ததாகவும் சொல்கிறாள். அதனால் முனஎச்சரிக்கையாக உங்களை பார்பதையே தவிர்க்கிறாள். அத விடுங்க தலைவா, ஏன் இந்த நாங்கு வருடமாக நீங்கள் சரியாக கதைகள் எழுதுவது இல்லை, நான் உங்களை விட்டு சென்று விட்டேன் என்று வருத்தமா என்று சொல்லி உரக்க சிரித்தான்.சக பயணிகள் முறைக்க அமைதியானான் மிதுன். சிரிச்சது ஒரு குற்றம்போல் பார்கிறாங்க , இருங்கையா இன்னும் கொஞ்சம் நேரத்தில் விமானம் தலைகுப்ற விழபோகுது அப்ப குய்யோ முய்யோ கத்துவீங்க பார்த்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் எதிரில் இருந்த தியா திரும்பி பார்த்து அழுதாள். இதுவேறையா என்று சலித்துக்கொண்டான்.
                                        
                                           மிதுனும் சந்தோஷும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள், சென்னை செல்ல இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கும் தருவாய்யில் சீட் பெல்ட் அலாரம் ஒலித்தது. அணைவரும் சீட் பெல்ட் அணிய விமான கேப்டன் எச்சரிக்கை ஒலிக்கிறது “வானிலை மிகமோசமாக இருப்பதினால் அணைவரும் அவர் அவர் இருக்கையில் அமரவும்”. பாஸ் இவங்க தமக்கே கப்சா விடுவாங்க அந்த கன்னாடியை திரையை திறங்கள் என்றான் சந்தோஷ். இருவருக்கும் ஒன்றும் புலப்படவில்லை. என்ன பாஸ் இவ்வளவு கருப்பா இருக்கு உங்க கலரே தேவாலம் போல என்று இருவரும்
சிரித்துக்கொண்டு இருந்தநேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர மின்னல் விமானத்தின் பக்கத்தில் ஒலித்து மறைந்தது. விமானம் நிலைதடுமாற ஆராமித்தது. சிறிது ஆட்டத்துக்கு பின் சகஜநிலைக்கு திரும்பியது. விமானியின் குறல் ஒலித்தது “ Dont get panic. Please be seated with seat belt. We will be landing in Chennai airport in another 30 mins. Thank you!”. விமானியின் பேச்சை கேட்க யாருக்கும் மணமில்லை அணைவரும்  பயத்தில் உறைந்து இருந்தார்கள். எல்லாம் முடிந்தது பாஸ், நல்லபடியா சென்னை போனா வடபழனி கோவிலில் போய் மொட்டை போடுறேன் ஆனா அது நடக்காதுப்போல என்றான் சந்தோஷ். சும்மாஇருடா நானே பயத்தில் இருக்கேன். இதனிடையில் விமானி அவசரகால உதவி என்னை அழைத்து பேசிகொண்டுஇருந்தார். சிறிதுநேரத்தில் விமானியின் குறல் “மோசமான வானிலை காரணமாக விமானம் சென்னையில் இருந்து பெங்களூர் திரும்புகிறது” என்று சொல்லிமுடிப்பதற்குள் இன்னொரு மின்னல் விமானத்தின் வலது பக்க இறகின்மீதுபட்டு  மறைந்தது.பயனிகள் அணைவரும் பயந்து கூச்சல்யிட்டார்கள். மிகவேகமாக அணைவரும் கன்னாடி திரையை திறந்துப்பார்த்து ஒன்றும் ஆகவில்லை என்று நிம்மதி முச்சிவிட்டார்கள். விமானம் பத்தாயிரம் அடி மேலேப்பறக்க உத்தரவுவர விமானி விமானத்தை மேலே எழுப்ப முகர்ச்சியில் இறங்கினார். பயனிகள் அணைவரும் விமானம் செங்குத்தாக போவதுப்போல் உணர்ந்தார்கள். ஒரு இருவது நொடிக்குள் மிண்டும் ஒரு பயங்கரமான மின்னல் விமானத்தின் வலது இறகின் மேல் இறங்கியது, செங்குத்தாக சென்ற விமானம் நேராகி குடிகாரர்கள் போல் ஆடியது. அந்த தள்ளாட்டத்திலும் சந்தோஷ்யின் மனம் தள்ளாடியது. சந்தோஷ் அவளை உற்று நோக்க அவளோ தன் கரங்களால் முகத்தைமூடி தேம்பி கொண்டு இருந்தால். மிதுன் இருவரையும்
பார்த்துவிட்டு இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ் இன்னும் எவ்வளவு நிமிடங்கள் நாம் உயிரோடு இருப்போம்னு தெரியல்ல இப்ப போய் சொல்லிக்கொண்டு இருக்கும்ப்போது அணைவரும் இடதுப்புறமாக திரும்ப அவளும் தன் கரங்களை விலக்கி திரும்ப அட்டைப்படத்தில் தெய்வத்தின் பின் இருக்கும் ஒலி வட்டம் போல தியாவின் பின்னால் தெரிந்தது. மெய்சிலிர்த்துக்கொண்டு இருந்த சந்தோஷ்க்கு பிறகுதான் தெரிந்தது முன்றாவது மின்னல் விமானத்தின் வலது இறகுனை பதம்பார்த்தது என்று. தீயின் பிலம்பு செந்நிறத்தில் உமில, விமானம் இயக்கப்படுவதோ ஒரேஒரு இன்ஜினில், பெங்களூர் திரும்பும் என்னமும், மேலே எமும் என்னமும் கைவிட இப்போது இருக்கும் ஒரேவழி சென்னையில் தரை இறங்குவது மட்டும்தான்.


                                    விமானி அவசரமாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க, பாதுகாப்பு காரணங்களைக்காட்டி சென்னையில் தரையிரங்க அனுமதி மறுக்கப்படுகிறது. அணைவரும் அவரவர் கடவுளை வேண்டிக்கொண்டனர். மிதுனும் கன்னைமுடி வேண்டிக்கொள்ள, சந்தோஷோ கண்திறந்து அவனுடைய கடவுளை பார்த்துக்கொண்டு இருந்தான். விமானம் இப்பொழுது வங்காள விரிகுடா கடலின் மேல் தள்ளாடிக்கொண்டு இருந்தது. அணைவரின் பராத்தனை வீண் போகவில்லை, சென்னையில் தரையிரங்க அனுமதி கிடைத்தது என்று விமானியின் அறிவிப்பு ஒலித்தது. இன்னும் அரைமணி நேரம் தான் விமானம் தாக்குபிடிக்ககும் பத்து நிமிடங்களில் தரையிரங்கிவிடலாம் என்ற என்னத்தில் விமானி அந்த அறிவிப்பை மறைத்தார். இரவு 9 மணி,சென்னை எப்போதும் போல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தான் மிதுன். மின்னல்யுடன்  
இப்போது புயல் காற்றும் சேர்ந்துக்கொண்டதால் தரையிரங்க 10 நிமிடம் இப்போது இருவது நிமிடங்கள் ஆகும். விமானத்தின் ஒரு இறகில் தி இருப்பதினால் விமானத்தை அடுத்தப்பத்து நிமிடங்களில் தரையிரக்க வேண்டும். விமானத்தின் பறக்கும் உயரம் படிபடியாக குறைய, புயல்காற்றின் வேகம் அதிகமாக,விமானத்தின் வலது திசையில் பயங்கர சத்தமும் அதனை தொடர்ந்து விமானத்தின் கன்னாடியில் விரிசல் விட, அவளோ பயத்தில் மிதுனை நோக்கிவர, மிதுனுக்கு கண்ணை திறப்பாதாயில்லை. கண்ணிர் ததும்ப சந்தோஷ்யிடம் இதற்கு தான் நான் உங்களிடம் பேசவில்லை என்று உறக்க அழுதால். உங்கள் பயம் உன்மையாகிவிட்டதே என்னு சந்தோஷ் நொந்துக்கொண்டான்.

                                                              இதனிடையில் தீ மெல்ல விமானத்தின் விமானத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக ஆட்க்கொண்டது. உள்ளே கூச்சல் பயனிகள்
அணைவரும் அங்கே இங்கே என்றி அலைந்துக்கொண்டு இருக்க, சந்தோஷும் மிதுனும் இருக்கையை விட்டு எழவில்லை, அவளும் அருகில் நின்றிந்தால். சென்னை விமானநிலையத்தில் ஒதுக்குப்புறமான ஓடுதளம் 24 யில் தரையிரங்க தயார் செய்யப்பட, அதே நேரத்தில் அவசரகால வாகனங்களும் தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுதளத்தை நோக்கி மெதுவாக ஆற்றில் விழுந்த இலைப்போல் வந்துக்கொண்டு இருந்தது. விமானியின் சாமர்த்தியத்தால் பின் சக்கரம் தரையில் பட, முன் சக்கரம் தரையில் முத்தமிட இருந்த தருவாயில், தீயில் எரிந்துக்கொண்டு இருந்த விமானத்தின் ஒரு பகுதி உடைந்து விமானத்தின் பின் பகுதியை உடைத்துக்கொண்டு சென்றதால் விமானம் மதம் பிடித்ததுப்போல் ஒடியது. விமானத்தின் பின் இறகு உடைய துவங்கின, அங்கேஇருந்த பல பொருள்கள் காற்றில்ப்பறக்க துவங்கின. விமானம் ஓடுதளத்தைவிட்டு அதே வேகத்தில் வேறு திசையை நோக்கி செல்கிறது. விமானநிலைய ஊழியர்கள் அணைவரும் சிதரி ஒடதுவங்க, உள்ளிருப்பரே ஒருவர் கை ஒருவர் பிடித்து நின்றார்கள். அதற்குள் காற்றின் வேகம் அதிகரிக்க விமானத்தின் பின் வரிசையில் இருந்த ஒரு நபர் காற்றில் உந்தபெற்று வெளியே விசப்படுகிறார். விமானத்தின் உள் இருப்பவர்கள் அலறல் சத்தம் இன்ஜினின் சத்தத்தைவிட அதிகமாக விண்ணை எட்டும் அளவுக்கு கேட்டது. அணைவரும் முந்திஅடித்து முன் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்க சந்தோஷயிடம் பேசிக்கொண்டு இருந்த தியா தடுமாறினாள். 

                                                             சந்தோஷ்யின் கைகள் அவள் கரங்களை பிடிக்கும் மின் கூட்டத்தின் ஒரு பகுதியினர் அவளை இடித்துதள்ளிவிட்டு போனார்கள், இதனால் நிலை தடுமாறி கிழே விழுந்தாள். கூட்டத்தினர் தடுத்துநிறுத்தி அவளை எழுப்ப சந்தோஷ் முயல் அதற்குள் தீ மெல்ல விமானத்தின் இருக்கையில் பரவியது . கரும்புகையால் முச்சயர்தது போன மிதுனை எழுப்பி முன்னே அழைத்து சென்றுவிட்டுவிட்டு, அவளை தேடுகிறான் சந்தோஷ் . நடுப்பகுதியில் எற்ப்பட்ட புகைமுட்டத்தில் இருந்த தியா சற்று எழுந்துநிற்க முயல, விமானித்தின் வேகம் சிறிது குறையத்தொடங்க மிதுன் நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள் விமானத்தின் முன் சக்கரம் உடைந்தது.
விமானத்தின் உள்ளே புகை மண்டலங்கள் சூழ அவளை மெல்ல புகை ஆட்கொண்டது. சந்தோஷ் அவளை தேடி துளாவ புகையை தவிர வேறு எதுவும் அகப்படவில்லை. இருவரும் விடாமல் தேடுகிறார்கள் மக்களோ அங்கும் இங்கும் அலைகிறார்கள், முன் சக்கரம் உடைந்து தீ பிழம்பை தெறிக்கவிட்டு சென்றுக்கொண்டு இருந்த விமானம் ஒரு கட்டத்தில் எதிரில் இருந்த மற்றொரு விமானத்தை இடித்துக்கொண்டு நின்றது. விமான சிப்பந்திகள் அவசரகால வெளியேற்றும் ஸ்லைடுகள் (Evacuation Slide) திறந்துவிட்டார்கள். அதில் ஒவ்வொரு பயணியாய் குதித்து தப்பித்து கொண்டுஇருந்தார்கள். உள்ளே எட்டி பார்த்து கொண்டே அருகில் இருந்தவர்களை அதில் இரக்க உதவி செய்து கொண்டுயிருந்தான் மிதுன், சந்தோஷையை காணவில்லை, தேடிக்கொண்டு உள்ளே சென்றான். புகையில் சந்தோஷ் தட்டுப்பட அவனை பிடித்து கொண்டு விமானத்தின் ஸ்லிட்டிங்கில் குதித்தார்கள் இருவரும்.


ஒரு வழியாக எல்லோரும் வெளியேற அவரசக்கால வாகனங்கள் விமானத்தை நோக்கி விரைந்தது. சந்தோஷ்வேதணையுடன்
விமானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். புகையும் நெருப்பும் பரபரப்பும் மெல்ல தனிகிறது, சந்தோஷின்பதட்டம் அதிகரிக்கிறது. அணைத்தும் அடங்கிப்போக முதலுதவி சிகிச்சை முடிந்து சந்தோஷும் மிதுனும் ஆம்புலன்ஸ் உதவியுடன் விமானநிலைய முகப்பை நோக்கி நகர்கிறார்கள். ஏனோ சந்தோஷ் இன்னும் அந்தஎறிந்த விமானத்தையே பார்த்து கொண்டுவந்தான். இவர்களுக்கு பெரியதாய் ஒன்றும் இல்லை என்றவுடன் சில நேரத்துக்கு பின் இவர்களுக்கு விமான நிலையத்தைவிட்டுவெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இருவரும் தானியங்கி படிகள் உதவியுடன் வரவேற்பு வாயிலை நோக்கிவந்து கொண்டு இருந்தார்கள். பாஸ் யார் செய்த புண்ணியமோ நமக்கு ஒன்றும் ஆகவில்லை, கொஞ்சம் அசந்து இருந்தால் இந்நேரம் காற்றில் பறந்து கடலில் விழுந்துதிருப்பேன், முன்னே சொன்னது போல் வடபழனி கோவிலில் கண்டிப்பா மொட்டை போடவேண்டும் என்று சகஜ நிலைகுத்திரும்பியது போல் பேசிக்கொண்டே வந்தான் மிதுன், இவ்வளவு பேசுறான் பதிலுக்கு ஏதாவது சொல்கிறாரா பார் என்று சந்தோஷையை பார்க்க அவனோ அதிர்ச்சியாய் நிற்கிறான். என்ன பாஸ் என்ற குரல் சந்தோஷின் காதில் எட்டவில்லை, சந்தோஷின் பார்வை மிதுன் பின்தொடர ஒரு பெண் மிகவும் பதற்றமாக நிற்கிறாள் கையில் வரவேற்ப்பு பதாகையுடன். இருவரும் அதிர்ச்சியாகி அவளை நோக்கி முன்னேற அவளோ கூட்டத்தின் உள்ளே சென்று மறைகிறாள். அணைத்து திசைகளிலும் தேடியும் அவள் அகப்படவில்லை, மிதுன் அந்த பதாகையை எடுத்து பார்த்தான் அதில் "Welcome Back " என்ற வாசகமும் திவ்யா என்று எழுதப்பட்டுஇருந்தது. ஒரு வேலை இங்கே பார்த்தது உண்மையா இல்லைஅங்கு நடந்தது உண்மையா என்று ஒன்றும் புரியாமல் இருவரும் விழித்துக்கொண்டு இருந்தார்கள். பல வருடத்துக்கு பிறகு நாம் சந்தித்தது இப்படி ஒரு அனுபவத்தை தரும் என்று நான் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. இந்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு இருக்கேன்னு முந்திக்கொண்டு சொன்னான் மிதுன், சந்தோஷோ சிகரட்டை பற்றவைத்து திரும்பி பார்த்துக்கொண்டே தானாக பேசிக்கொண்டே மிதுன் சொல்லுவதை கேட்காமல் நடக்க துவங்கினான்.

                                                       ***  முற்றும்  ***